தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவனி அரிசி

Go down

கவனி அரிசி                         Empty கவனி அரிசி

Post  ishwarya Thu Feb 21, 2013 5:46 pm

கவனி அரிசி & 200 கிராம் (நாவல்பழக் கலரில் இருக்கும்)
சர்க்கரை & 50 கிராம்
தேங்காய்ப்பூ &  மூடி துருவிய பூ
ஏலக்காய் & 2 பொடி செய்தது
பாசிப்பருப்பு & 3 மேஜைக்கரண்டி
கவனி அரிசியை 4 மணி நேரம் முன்பு கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு 2  டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி விடவும்.

பின் இட்லிச் சட்டியில் தண்ணீர் வைத்து சுட்டதும், அதில் அரிசியுடன் கூடிய மூடி போட்ட பாத்திரத்தை வைத்து இட்லிச் சட்டியையும் மூடி விடவும். பாத்திரத்தில் உள்ள அரிசி கெட்டியாக வெந்ததும் எடுத்து சற்று ஆற வைத்து, பின் அதில் துருவிய தேங்காய், சர்க்கரை, பாசிப்பருப்பு அவித்தது. ஏலப்பொடி ஆகியவற்றைக் கலந்து கிளறிப் பரிமாறவும்.

குக்கராக இருந்தால் ஊறிய அரிசிக்கு ஒன்றுக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து மூடி ஒரு விசில் சத்தம் வந்ததும் குறைந்த தணலில் 5 நிமிடம் வைத்து இறக்கி ஆறியதும்

மேற்கூறியவற்றைக் கலந்து உண்ணவும்.
கவனி அரிசியை ஒரு பாட்டில், அல்லது டப்பாவில் அல்லது பாலீதின் பையில் போட்டு மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் வண்டு வராமல் பாதுகாக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum