தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் பலத்திற்கு இலேகியம்

Go down

உடல் பலத்திற்கு இலேகியம்  Empty உடல் பலத்திற்கு இலேகியம்

Post  oviya Sun Feb 17, 2013 8:32 pm

தேவையான பொருட்கள்:

மிளகு – 50 கிராம்
கசகசா- 50 கிராம்
பூனைக்காலி விதை- 50 கிராம்
அமுக்கிரான் கிழங்கு- 50 கிராம்
புளியங்கொட்டைப் பருப்பு- 50 கிராம்
திப்பிலி- 50 கிராம்
சின்ன லவங்கப் பட்டை- 50 கிராம்
சுக்கு – 25 கிராம்
வெட்டிவேர் – 25 கிராம்
பாதாம் பிசின் – 25 கிராம்
கடுக்காய்த் தோல் – 25 கிராம்
நெல்லிப் பருப்பு – 25 கிராம்
தான்றிக்காய் – 25 கிராம்
சித்ர மூலம் (வேரின் பட்டை )- 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
கொத்துமல்லி விதை – 25 கிராம்
இலவங்கப்பத்திரி – 25 கிராம்
ஓமம் – 25 கிராம்
சாதிக்காய் – 25 கிராம்
சாதிப்பத்திரி – 25 கிராம்
செம்பருத்திப் பூ – 25 கிராம்
ரோஜா இதழ் – 25 கிராம்
கிராம்பு – 25 கிராம்
திராட்சை (காய்ந்தது)-250 கிராம்
பேரீச்சங்காய்-150 கிராம்
தேன் – 600 கிராம்
நெய்- 1200 கிராம்
சர்க்கரை – 1250 கிராம்
பால்.
எலுமிச்சம் பழச்சாறு.
தயிர்.

செய்முறை:

மிளகை எடையளவுக்கு கூடுதலாக எடுத்து மண் சட்டியில் இளம் வறுவலாக வறுத்து இடித்து வடிகட்டிக் கொள்ளவும்.
கசகசாவையும் முன் போல் செய்து கொள்ளவும். பூனைக்காலி விதையையும், புளியங்கொட்டையையும் எடை கூடுதலாக எடுத்து மண் சட்டியில் வறுவலாக வறுத்து மண் சட்டியில் போட்டு தூய நீர் விட்டு ஊற வைத்து தோலை நீக்கி மீண்டும் மண் சட்டியில் போட்டு பசும் பாலை 500 மி.லிட்டர் ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து விதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவும்.
திப்பிலி, சின்ன லவங்கப்பட்டை, தோல் நீக்கிய சுக்கு, வெட்டிவேர் இவைகளை நன்கு இடித்து எடையளவு எடுத்துக் கொள்ளவும். தான்றிக் காயையும், காய்ந்த சித்திர மூல வேரையும் மண் சட்டியில் 200 மி. லிட்டர் எலுமிச்சம் பழச் சாற்றில் 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்து உலர்த்தி இடித்துக் கொள்ளவும். நெல்லிப் பருப்பை பசுந்தயிரில் ஊற வைத்து எடுத்து உலர்த்தி இடிக்கவும்.
அதிமதுரம், கொத்துமல்லி விதை, இலவங்கப்பத்திரி, ஓமம் இவைகளை இளம் வறுவலாக வறுத்து இடித்து வடிகட்டவும். சாதிக்காயை சிறுத்துண்டுகளாக வெட்டி ஒரு வாணலியில் 100 மி.லி. பசு நெய் ஊற்றி வறுத்து எடுத்து இடித்துக் கொள்ளவும். சாதிப்பத்திரி, செம்பருத்திப் பூ, ரோஜா இதழ் இவைகளை இடித்துக் கொள்ளவும்.
கிராம்பை இடித்துக் கொள்ளவும், பாதாம் பிசினை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு 500 மி.லிட்டர் பசும் பாலை ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
காய்ந்த திராட்சையை ஊற வைத்து இளகல் செய்யப் போகுமுன் அரைத்துக் கொள்ளவும். பேரீச்சங்காயை பாதாம் பிசின் போல் செய்து அரைத்துக் கொள்ளவும். விறகடுப்பில் இரும்புச் சட்டியை வைத்து சர்க்கரையை உடைத்துப் போட்டு 500 மி.லிட்டர் பசும்பாலை ஊற்றி சிறு தீயாக எரிக்கவும். பாகு ஆகும் பொழுது எல்லா மருந்துச் சரக்குகளையும் கொட்டி 15 நிமிடங்கள் கிண்டி தேனை ஊற்றிக் கிண்டி இறக்கி நெய்யை உருக்கி ஊற்றிக் கிண்டவும். இளகல் பதம் குறைந்திருந்தால் மீண்டும் அடுப்பில் வைத்துக் கிண்டி கொள்ளவும். உடன் வேறு பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.

உபயோகிக்கும் முறை:

காலை 10 கிராம் இளகல், மாலை 10 கிராம் இளகல் பசும் பால் அல்லது வெந்நீருடன் 40 நாட்கள் பயன்படுத்த வேண்டும்.

தீரும் நோய்கள்:

உடல் பலவீனமாக காணப்படுதல், சோர்வாக காணப்படுதல் ஆகிய நோய்கள் குறையும்.

பத்தியம்:

மருந்துண்ணும் நாட்களில் மீன் வகைகளையும், இளநீர், குளிர்நத பானங்கள் இவைகளை நீக்க வேண்டும்.

குறிப்பு:
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 80 நாட்கள் வரையும் உண்ணலாம். எந்தத் தீங்கும் ஏற்படாது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பசியின்மைக்கு இலேகியம்
» மருத்துவ இலேகியம்
» பசியின்மைக்கு இலேகியம்
» உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான்
» உடல் குளிர்ச்சி பெற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum