இயற்கை வைத்தியம் - ஒரு அறிமுகம்!
Page 1 of 1
இயற்கை வைத்தியம் - ஒரு அறிமுகம்!
இயற்கை வைத்தியம் என்றால் என்ன? வீட்டில் நம் பாட்டிமார் நமக்கு சிறுவயதில் சொல்லிக்கொடுத்ததே இயற்கை வைத்தியம் எனலாம். அதுவே செவிவழிச் செய்திகளாகப் பெறப்பட்டு, நமது முன்னோர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக தொன்றுதொட்டு - காலங்காலமாக வைத்திய முறைகளாக இருந்து வந்துள்ளன. எனவே `பாட்டி வைத்தியம்' என்று கூட சொல்லலாம்.
இன்றைய தனிக் குடித்தன வாழ்வில் (Micro Family) பாட்டிமார்களே குடும்பங்களில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படியே இருந்தாலும், எங்காவது ஒரு `வடக்கு காருகுறிச்சியிலோ' அல்லது `சேரன்மாதேவியிலோ' உள்ள பழைய மூதாதையர் வீட்டைப் பராமரித்துப் பார்த்துக் கொள்ளவே அவர்களை இளைய தலைமுறையினராகிய நாம் பயன்படுத்துகிறோம்.
பாட்டிகள் நமக்கு எடுத்துக் கூறிய ஒவ்வொரு விஷயங்களும் அரிய மருத்துவ பொக்கிஷங்கள் எனலாம்.
இயற்கையோடு இணைந்ததே நமது உடல். நம் உடலுக்குள்ளேயே ஒரு மருத்துவ சுழற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுவாக பிறந்த குழந்தைகள் மலம் கழிக்கவில்லை என்றால், அதற்கு ஒரு வைத்தியம், குழந்தைகள் சிறுநீர் ஒழுங்காகப் போகவில்லை என்றால் அதற்கு ஒரு கைப்பக்குவம் என பாட்டிமார்களும், தாதிகள் என்று சொல்லப்படும் பெண்களும் அடிப்படையில் மருத்துவர்களிடம் செல்லாமலே குழந்தைகளின் நலனைக் காத்து வந்தனர்.
முடியாத பட்சத்திற்கு தீராத வியாதி என்றால் மட்டுமே `இங்கிலீஷ் டாக்டர்' இடம் (கிராமங்களில் அப்படித்தான் கூறுவார்கள்) கொண்டு செல்வார்கள்.
ஆனால், இன்று நிலைமை எப்படி?
குழந்தைகள் லேசாக இருமினாலே, ஏதோ மிகப்பெரிய வியாதியாகக் கருதி மருத்துவரிடம் அழைத்துச் சென்று விடுகிறோம். அதற்கேற்றாற் போல், புதிது புதிதாய் நோய்களும் உருவாகக் காரணங்கள் பல உள்ளன.
எனவே இயற்கையோடு இணைந்த - பக்க விளைவுகள் இல்லாத வைத்தியம், அவை சார்ந்த மருத்துவ விவரங்களையே இப்பகுதியில் அளிக்க விழைகிறோம்.
இன்றைய தனிக் குடித்தன வாழ்வில் (Micro Family) பாட்டிமார்களே குடும்பங்களில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படியே இருந்தாலும், எங்காவது ஒரு `வடக்கு காருகுறிச்சியிலோ' அல்லது `சேரன்மாதேவியிலோ' உள்ள பழைய மூதாதையர் வீட்டைப் பராமரித்துப் பார்த்துக் கொள்ளவே அவர்களை இளைய தலைமுறையினராகிய நாம் பயன்படுத்துகிறோம்.
பாட்டிகள் நமக்கு எடுத்துக் கூறிய ஒவ்வொரு விஷயங்களும் அரிய மருத்துவ பொக்கிஷங்கள் எனலாம்.
இயற்கையோடு இணைந்ததே நமது உடல். நம் உடலுக்குள்ளேயே ஒரு மருத்துவ சுழற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுவாக பிறந்த குழந்தைகள் மலம் கழிக்கவில்லை என்றால், அதற்கு ஒரு வைத்தியம், குழந்தைகள் சிறுநீர் ஒழுங்காகப் போகவில்லை என்றால் அதற்கு ஒரு கைப்பக்குவம் என பாட்டிமார்களும், தாதிகள் என்று சொல்லப்படும் பெண்களும் அடிப்படையில் மருத்துவர்களிடம் செல்லாமலே குழந்தைகளின் நலனைக் காத்து வந்தனர்.
முடியாத பட்சத்திற்கு தீராத வியாதி என்றால் மட்டுமே `இங்கிலீஷ் டாக்டர்' இடம் (கிராமங்களில் அப்படித்தான் கூறுவார்கள்) கொண்டு செல்வார்கள்.
ஆனால், இன்று நிலைமை எப்படி?
குழந்தைகள் லேசாக இருமினாலே, ஏதோ மிகப்பெரிய வியாதியாகக் கருதி மருத்துவரிடம் அழைத்துச் சென்று விடுகிறோம். அதற்கேற்றாற் போல், புதிது புதிதாய் நோய்களும் உருவாகக் காரணங்கள் பல உள்ளன.
எனவே இயற்கையோடு இணைந்த - பக்க விளைவுகள் இல்லாத வைத்தியம், அவை சார்ந்த மருத்துவ விவரங்களையே இப்பகுதியில் அளிக்க விழைகிறோம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பிணிகளுக்கு இயற்கை வைத்தியம்
» இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு
» இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு
» கூந்தலுக்கு வைத்தியம்!
» பாட்டி வைத்தியம்
» இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு
» இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு
» கூந்தலுக்கு வைத்தியம்!
» பாட்டி வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum