தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுத்தமான குடிநீரே ஆரோக்கிய வாழ்வைத் தரும்!

Go down

சுத்தமான குடிநீரே ஆரோக்கிய வாழ்வைத் தரும்!  Empty சுத்தமான குடிநீரே ஆரோக்கிய வாழ்வைத் தரும்!

Post  meenu Tue Feb 12, 2013 5:13 pm

நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். உடலின் இயக்கத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதும் கூட.

பொதுவாக ஆரோக்கியமான ஒரு நபர் உணவு இல்லாமல் குறைந்தது 6 முதல் 8 வாரங்கள் வரை கூட உயிர் வாழ முடியும். தண்ணீரில் எவ்வித கலோரியோ அல்லது சத்துணவோ கிடையாது என்ற போதிலும் தண்ணீரின்றி யாராலும் உயிர் வாழ முடியாது. 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும்பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.

மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.

உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது. உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.

நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. அதுவே 65- 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது.

மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது. ஒவ்வொரு நாளும் உடலின் தண்ணீர் தேவை மாறுபடுகிறது. காபி, டீ, பழச்சாறுகள், பழங்கள், காய்கறிகள், முட்டை, மாமிசம், உணவு வகைகள், மீன், பிரட் போன்றவற்றிலிருந்தும் தண்ணீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வெப்பமான சூழ்நிலையில், கோடை காலத்தில் நமது உடலுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு அதிக தண்ணீர் தேவை

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், அந்த குழந்தையைச் சுற்றிலும் தண்ணீர் போன்ற படலம் ஏற்படுவதற்கும், ரத்த அணுக்களின் விரிவாக்கத்தாலும் உடலின் தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவையாகிறது. அவர்கள் கொடுக்கும் தாய்ப்பாலானது 87 சதவீதம் அளவிற்கு தண்ணீரை உள்ளடக்கியது.

பொதுவாகவே நாம் எந்த அளவிற்கு தண்ணீரை உட்கொள்கிறோமோ அந்த அளவிற்கு சிறுநீர் போன்று வெளியேறும் திரவத்தின் அளவும் அதிகரிக்கிறது. இது காபி, டீ போன்றவற்றை அதிகம் குடிப்பவர்களுக்கும் பொருந்தும். மேலும் உப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் தேவையாகிறது.

தண்ணீரின் தாகம் வயதாக ஆக குறையும். எனவே வயதானவர்கள் தங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் அருந்த வேண்டும். கடுமையான வெப்பம் போன்ற கோடை காலத்தில் தாகம் ஏற்படாத நிலையிலும் முதியோர் அதிகம் தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் முதியோர், உடலில் உள்ள தண்ணீர் ஏற்கனவே இழப்பு ஏற்பட்டு விட்டாலும் சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

நீங்கள் எந்த அளவிற்கு தண்ணீர் அருந்துகிறீர்களோ அந்த அளவு தண்ணீரை உங்களின் சிறுநீரகம் சிறுநீராக வெளியேற்றுகிறது. சிறுநீரகம் செயல்படுவதற்கும் அதிகமான அளவு தண்ணீரை அருந்தும்பட்சத்தில் அந்த தண்ணீர் செல்களின் மூலம் வியர்வையாக வெளியேறுகிறது.

நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்தல் அவசியம். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கலக்கும் குடிநீர், உரம் கலந்த நீர், மாசு படிந்த தண்ணீர் போன்றவற்றை குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சமீபகாலமாக எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே நோய்களை உருவாக்கும் பாக்டீரியாவை அழிப்பதற்கு குளோரின் கலந்த தண்ணீரை அருந்த வேண்டும். குளோரின் கலப்பதிலும் உள்ள நோய் தன்மையை கருத்தில் கொண்டு சுத்தமான தண்ணீரை அருந்துவதை உறுதிப்படுத்துதல் அவசியம்.

பெரும்பாலும் நகராட்சிகளில் இருந்து குழாய்கள் மூலமாகவும், டேங்க் -களிலும் அளிக்கப்படும் தண்ணீரில் காரீயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நச்சுத்தன்மை கொண்டது என்பதால் உரிய முறையில் தூய்மைப்படுத்தி பயன்படுத்த வேண்டும். நாள்பட்ட குழாய்களில் துரு காணப்படும் என்பதால் அதுபோன்ற குழாய்கள் மூலம் வரும் தண்ணீரை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். சிலநேரம் குழாய்களில் களிமண் போன்ற மாசு கலந்து வர நேரிடலாம் என்பதால் குடிநீரில் கவனம் தேவை.

பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரிலும் மாசு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன், ஏன் ஆண்டுக்கு முன்பு கூட நகராட்சி குழாயில் வரும் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதும் உண்டு. எனவே பணம் கொடுத்து வாங்கி பருகும் தண்ணீரிலும் கவனம் தேவை.

உடலுக்கு மிகமிக அத்தியாவசியமான தண்ணீரை உரிய முறையில் கூடிய வரை எந்த தண்ணீராக இருந்தாலும் காய்ச்சி வடிகட்டிய பின்னரே அருந்துவோம். ஆரோக்கிய வாழ்வை அடைவோம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum