தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழ்க்கை பரிட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கணுமா?

Go down

வாழ்க்கை பரிட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கணுமா? Empty வாழ்க்கை பரிட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கணுமா?

Post  ishwarya Tue Feb 12, 2013 1:18 pm

Questions men ask before marriage
வீட்டில் திருமணம் செய்ய முடிவு செய்து விட்டால், திருமணத்திற்கு முன் நிச்சயதார்த்தம் என்ற ஒன்று கண்டிப்பாக நடக்கும். அப்படி நிச்சயதார்த்தம் நடக்கும் போது பெரும்பாலான ஆண்கள் தம் வாழ்க்கைத் துணையாக வருபவரிடம் தனியாக பேச வேண்டும் என்பர். எதற்கு அப்படி பேச வேண்டும் என்று சொல்கின்றனர் தெரியுமா? ஏனென்றால் ஆண்கள் தம்மிடம் இருக்கும் ஒரு சில சந்தேகங்களை, தம் சூழ்நிலைகளை அவர்களிடம் கேள்வியாக கேட்டு அதற்கு பெண்கள், அவர்கள் நினைத்த மாதிரி பதில் கூறினால் தான் அந்த திருமணம் நல்லபடியாக நடக்கும்.

நிச்சயதார்த்தம் தினத்தன்று திடீரென்று தனியாக பேச வேண்டும் என்று கூறியதும், பதட்ட நிலையில் இருக்கும் பெண்கள் தன்னிடம் என்ன கேட்பார்களோ ஏது பேசுவார்களோ என்று அஞ்சிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே ஆண்கள் கேட்கும் கேள்விகள் என்னென்னவென்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

ஆண்கள் அதிகம் கேட்கும் கேள்விகளில் ஒன்று தான், 'சமைக்கத் தெரியுமா?'. ஏனென்றால் ஆண்களுக்கு உணவு மிகவும் பிடிக்கும். பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்கு முன் ஹோட்டலில் தான் அதிகம் சாப்பிட்டு இருப்பார்கள். அதனால் அவர்கள் திருமணத்திற்குப் பின்னும் ஹோட்டலில் சாப்பிட விரும்பமாட்டார்கள், தன் மனைவி கையால் வீட்டில் சாப்பிடுவதையே விரும்புவர். ஆகவே நல்லா சமைக்கத் தெரிஞ்சா நீங்க பாஸ் தான்.

அடுத்ததாக கேட்பது, 'என் பெற்றோருடன் சேர்ந்து வாழ விருப்பமா?'. ஏனென்றால் ஆண்களுக்கு அவர்கள் பெற்றோர் மீது பாசம் அதிகம். ஆனால் பெண்கள் தன் கணவருடன் பெரும்பாலும் தனியாக இருப்பதையே விரும்புவர். ஏனெனில் அவர்கள் இருந்தால் தமது திருமண வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பெண்கள் நினைப்பர். இதை கருத்தில் கொண்டே ஆண்கள் இப்படி கேட்கின்றனர். இதற்கு ஆண்கள் பெரும்பாலும் அனுசரித்து செல்பவரையே விரும்புவர்.

'என்னோட போதிய வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி விடுவாயா?' என்று கேட்பது. எல்லா ஆண்களுக்கும் தாம் எவ்வளவு சம்பாதித்தாலும், அது அவர்களுக்கு குறைவாகவே தோன்றும். அவர்கள் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்றே இருப்பர். மேலும் எதிர் காலத்தில் சந்தோஷமாக இருக்கவே சேமித்து வைக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருப்பர். ஆகவே தனக்கு வருபவளும் தன் வருமானத்தை வைத்து சந்தோஷமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்றே இந்த கேள்வியை கேட்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

'என்னை அனுசரித்து, வளைந்து கொடுத்து போவாயா?'. குடும்ப வாழ்க்கை இனிமையாக அமைய இந்த கேள்வியை கேட்கின்றனர். ஏனென்றால் சில பெண்கள் புரிந்து கொள்ளாமல், அனுசரிக்க பிடிக்காமல் பிரிந்து விடுகின்றனர், அதற்காகவே இதை கேட்கிறார்கள். குடும்பத்தில் அனுசரித்து, வளைந்து கொடுத்து சென்றால் தான் வாழ்க்கையானது இனிமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் எனவே பெண்களே இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதிலை சொல்லிவிட்டால் வாழ்க்கைப் பரிச்சையில் நீங்கள் நூற்றுக்கு நூறு பெற்று பாஸ் செய்து விடுவீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum