தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகளது பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்....

Go down

குழந்தைகளது பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்.... Empty குழந்தைகளது பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்....

Post  ishwarya Mon Feb 11, 2013 12:05 pm

Feeding bottle
குழந்தையானது பிறந்த பிறகு மிகவும் துடிப்போடு, மென்மையாக இருக்கும். அப்போது குழந்தைகளது ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, குழந்தைகளை படுக்க போடும் தரை, கட்டில், மெத்தை, துணி, அதிலும் முக்கியமாக பால் பாட்டில். எப்போது குழந்தைகளுக்கு பாலை பாட்டிலில் கொடுக்க ஆரம்பிக்கிறோமோ, அதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் தாய் பாலானது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, ஆரோக்கியத்தையும் தருகிறது. சில குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்ச நாட்கள் கொடுத்தால் போதாது. ஆகவே மருத்துவரிடம் ஆலோசனையானது தேவைப்படுகிறது. அப்படி குழந்தைகளுக்கு பாலை பாட்டிலில் கொடுக்கும் முன் பால் பாட்டிலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்....

1. குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலை ஊற்றி கொடுக்கும் முன், பாட்டிலை சுடு தண்ணீரில் கழுவி பின்னர் பாலை ஊற்றி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பாட்டிலை சூடான தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் கொடுத்தால் பாட்டிலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். மேலும் பாட்டிலில் உள்ள மூடியை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அதுவே குழந்தையின் வாய்க்குள் செல்கிறது, அதன்மூலமே கிருமிகள் குழந்தையின் வாயில் செல்லும். ஆகவே அதனை நன்கு சூடான நீரில் கழுவிய பின்னர் கொடுக்க வேண்டும்.

2. எப்போது குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலை கொடுக்கும் போதும், குழந்தைகளால் பால் முழுவதையும் குடிக்க முடியாது. ஏனெனில் அதன் வயிற்றானது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வளர்ச்சி அடையும். மேலும் குழந்தைகளால் எவ்வளவு பால் குடிக்க முடிகிறதோ, அவ்வளவு மட்டும் குடித்துவிடும். ஆகவே அந்த மீதிப் பாலை அப்படியே வைக்காமல், கொட்டிவிடவும். இல்லாவிட்டால் பாட்டிலில் பாக்டீரியா மற்றும் நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும்.

3. பாட்டிலானது ஈரமாக இருந்தால் பாக்டீரியா மற்றும் கிருமிகள் தங்கிவிடும். ஆகவே முதலில் பாட்டிலை சுடு தண்ணீரில் கழுவியதும், குளிர்ந்த நீரிலும் சற்று கழுவ வேண்டும். பிறகு உடனடியாக ஒரு சுத்தமான துணியில் நன்கு துடைத்துவிட வேண்டும். அப்படி துடைக்காமல் கழுவி விட்டு, மூடி வைத்துவிட்டால் அந்த பாட்டிலில் தண்ணீர் அல்லது பால் நாற்றமானது அப்படியே இருக்கும்.

4. தினமும் பாட்டில் மூடியை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் சுடு தண்ணீரில் நன்கு பாட்டிலையும், பாட்டில் மூடியையும் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் பாட்டில் மூடியை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேய்த்துக் கழுவலாம்.

ஆகவே குழந்தையின் பாட்டிலானது எப்போதும் சுத்தமாக, சரியான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். ஒரு வேலை குழந்தை பால் குடிக்கும் போது பாட்டிலை கீழே போட்டு விட்டால், சோம்பேறித்தனமாக இருக்காமல், பாட்டில் மூடியை மாற்றி கொடுங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum