தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உனக்கு நீயே நண்பன்

Go down

உனக்கு நீயே நண்பன் Empty உனக்கு நீயே நண்பன்

Post  birundha Sun Feb 10, 2013 9:39 pm

* உண்மையான தெய்வபக்தி இருந்தால் மனோதைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.
* பிறருடைய சொத்தை அபகரிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிய உடனேயே திருடனாகி விடுகிறான். திருடனுக்குரிய தண்டனை அவனுக்கு மனிதர்களால் விதிக்கப்படா விட்டாலும், கடவுளால் அவசியம் விதிக்கப்படுகிறது.
* திறமைகளைப் பயன்படுத்துவதனால் மக்களுக்கு வலிமை உண்டாகிறது.
* ஒருவன் தனக்குத்தானே நட்பாகிவிட்டால் உலகம் முழுவதும் அவனுக்கு நட்பாகிவிடுகிறது.
* நம்முடைய விருப்பப்படி உலகம் நடப்பதில்லை, தெய்வத்தின் விருப்பப்படியே இயங்குகிறது. எனவே, உனது பணிகளை தெய்வத்திடம் ஒப்படைத்து விடு.
* உள்ளத்திலே நேர்மையும் தைரியமும் இருந்தால் கை தானாகவே நேரான எழுத்தை எழுதும். தைரியம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும், சண்டி மாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும், அதன் வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum