தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடமையில் கருத்தாயிருங்கள்

Go down

கடமையில் கருத்தாயிருங்கள் Empty கடமையில் கருத்தாயிருங்கள்

Post  birundha Sun Feb 10, 2013 9:34 pm

* அறிவு வலிமை உடையது தான். அதற்காக, அறிவுடையவர்களை மட்டும் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டு, மற்றவர்களை இழிவாக நினைப்பது கூடாது.
* அறிவுடையவர்கள், இன்று பெரும்பாலும் தன்னிடம் இருக்கும் அறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி பிறரை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் பயன்படுத்துகின்றனர்.
* இறைவன் நமக்கு அறிவைத் தந்திருக்கிறான். அறிவை நமது வடிவமாக அமைத்திருக்கிறான். எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேராகத் திகழ்கிறது.
* அறிவு தான் நமக்கு ராஜா. மனமும், பொறிகளும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழவேண்டும். இல்லாவிட்டால் உடலுக்குத் தான் தீங்கு நேரிடும்.
* ஒரு பொருளுடன் உறவாடும் போது மனம் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போது தான் அப்பொருளைப் பற்றி நன்றாக முழுமையாக அறிய முடியும்.
* அறிவினைத் தெளிவாக்குங்கள். அறிவினை ஒருபோதும் தவறவிடாதீர்கள். ஓயாமல் உங்கள் கடமையில் கருத்தைச் செலுத்துங்கள். அப்போது எச்செயலைச் செய்தாலும் அச்செயல் நன்மையாக முடியும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum