தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பயத்தை அகற்றும் கணபதி

Go down

பயத்தை அகற்றும் கணபதி Empty பயத்தை அகற்றும் கணபதி

Post  birundha Sun Feb 10, 2013 9:33 pm

* மூல முதற்பொருளே! மணக்குளத்து விநாயகரே! உம் திருவடியே சரணம் என்று அடைக்கலம் கொண்டு விட்டோம். நாயினும் இழிவான நாங்கள், பல பிழைகளைச் செய்து மிகவும் களைத்திருக்கிறோம். அவற்றைப் பொறுத்துக் கொள்ளும்படி உன் ஒளி பொருந்திய மலர்ப்பாதங்களை வணங்கித் துதிக்கிறோம்.
* கேட்டதை வழங்கும் கற்பகவிநாயகரே! அருளை வாரி வழங்கும் ஆனைமுகத்தோனே! உலகம் யாவையும் படைத்தவரே! குருவே! சந்திரனைத் தலையில் சூடிய ஈசனின் மைந்தரே! உம் திருவடிகளை எங்கள் சிந்தையில் என்றும் வைப்போம்.
* உம்மை வழிபடும் எங்களுக்கு எட்டுத்திக்கும் வெற்றிக்கொடி நாட்டும் உயர்வாழ்வு வேண்டும். பகையே கூடாது. துயரில்லாத வாழ்க்கை வேண்டும். அறிவு வளர வேண்டும். வீரம் பெருக வேண்டும்.
* கருணைக்கடலே! உன்னருள் பெற்ற எங்களுக்கு அச்சம் என்பது சிறிதும் இல்லை. கடலே பொங்கி வந்தாலும் பயம் இனி இல்லை.
* வான்புகழ் பெற்ற மறைகளின் தலைவரே! எதற்கும் கலங்காத நெஞ்சுரத்தையும், எல்லாரும் இன்புற்று வாழும் வரத்தையும் அருள வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum