அம்பிகையைப் போற்றுங்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அம்பிகையைப் போற்றுங்கள்
* அம்பிகையே! பராசக்தித்தாயே! எண்ணிய எண்ணங்கள் யாவும் நல்லமுறையில்
நிறைவேற வேண்டும். திடமான நெஞ்சம் வேண்டும். தெளிவான நல்லறிவு
வேண்டும். செய்த பாவங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்தோட வேண்டும்.
* படைத்தல், காத்தல், மறைத்தல் என்னும்
முத்தொழில்களைப் புரிபவளே! கனியில் சுவையும்,
காற்றில் இயக்கமும் கலந்தது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் கலந்தவளே! உலகம் அனைத்தும் உனது அருளே வியாபித்திருக்கிறது. உனது திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்.
* அமுதம்போன்றவளே! புதுமைக்குப் புதுமையாய்,
பழமைக்குப் பழமையாய், உயிருக்குள் உயிராக,
என்னுள்ளே நானாகவும், நான் என்பதை உணர்ந்தபின் தானாகவும் நின்று வழிகாட்டுபவளே! உன்னைச்
சரணடைகின்றேன்.
* கவலை என்னும் நோய் தீர்க்கும் மருந்தானவளே!
உலகைக் கட்டியுள்ள பேரிருள் நீக்கும் பேரொளிச் சுடரே! யோகியரின் மனதில் இருப்பவளே! தாயே! உன்னை வணங்குகிறேன்.
நிறைவேற வேண்டும். திடமான நெஞ்சம் வேண்டும். தெளிவான நல்லறிவு
வேண்டும். செய்த பாவங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்தோட வேண்டும்.
* படைத்தல், காத்தல், மறைத்தல் என்னும்
முத்தொழில்களைப் புரிபவளே! கனியில் சுவையும்,
காற்றில் இயக்கமும் கலந்தது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் கலந்தவளே! உலகம் அனைத்தும் உனது அருளே வியாபித்திருக்கிறது. உனது திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்.
* அமுதம்போன்றவளே! புதுமைக்குப் புதுமையாய்,
பழமைக்குப் பழமையாய், உயிருக்குள் உயிராக,
என்னுள்ளே நானாகவும், நான் என்பதை உணர்ந்தபின் தானாகவும் நின்று வழிகாட்டுபவளே! உன்னைச்
சரணடைகின்றேன்.
* கவலை என்னும் நோய் தீர்க்கும் மருந்தானவளே!
உலகைக் கட்டியுள்ள பேரிருள் நீக்கும் பேரொளிச் சுடரே! யோகியரின் மனதில் இருப்பவளே! தாயே! உன்னை வணங்குகிறேன்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum