தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சக்தியைச் சரண் புகுவோம்

Go down

சக்தியைச் சரண் புகுவோம் Empty சக்தியைச் சரண் புகுவோம்

Post  birundha Sun Feb 10, 2013 9:12 pm

* பராசக்தியின் பாதமலர்களைச் சரணம் என்று அடைக்கலம் புகுந்தாலும், அவளிடம் பக்தி கொண்டு வாழ்ந்தாலும், அவளது புகழைப் பாடினாலும் அழியாத பேரின்பவாழ்வு வாழ்வு தருவாள். நம் கவலையைப் போக்கி அருள் செய்வாள்.
* அம்பிகையிடம் சுகத்தினை வேண்டித் தொழுங்கள். நம் மனக்குறைகளை அவளிடம் சொல்லி அழுங்கள். நம் வாழ்வில் நல்ல மாற்றங்களையும், மனதிற்கு வலிமையும், ஆறுதலையும் தந்தருளுவாள்.
* தாயே! எங்களைக் காப்பது உன் கடன்! இவ்வுலக வாழ்வினையே உனக்காக அர்ப்பணித்துவிட்டேன். காளித்தாயே! உன் துணை இருக்கும்போது மரணத்திற்கு அஞ்சத் தேவையில்லை. நோய்,பேய், ரணம், பழி என்று இனி எதை எண்ணியும் சிறிதும் பயமில்லை.
* ஒளி பொருந்திய நீலநிறம் கொண்டவளே! எங்கள் சிந்தையில் நிறைந்திடும் திறம் உடையவளே! அச்சம், பொய், சினம் என்னும் பொய்ம்மைக் குணங்கள் எல்லாம் எங்களை விட்டுப் போகட்டும். உள்ளவுறுதியோடு வாழ்க்கையை எதிர்கொள்ள அருள்கொடு.
* உலகங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவள் நீயே. உன்னருளால் சிந்தையும் தெளியட்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum