தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்

Go down

முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம் Empty முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்

Post  birundha Sun Feb 10, 2013 8:53 pm


* எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேராக இருக்கிறது. அச்சமே மடமை. அச்சமின்மையே அறிவு. அச்சம் இருக்கும் இடத்தில் அறிவுக்கு வேலையில்லை.
* எப்போதும் மலர்ந்த முகமும், இனிய சொல்லும், தெளிந்த உள்ளமும் கொண்டு வாழுங்கள். மலர்ந்த முகத்தோடு நம் பணிகளைச் செய்வதே வாழ்வின் பயனாக இருக்கிறது.
* தன்னையே எரித்துக் கொண்டு கருவறையில் ஒளிபரப்பும் தீபம், ஆயுள் உள்ளவரை மனிதன் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அருங்குணத்தை நமக்குப் போதிக்கிறது.
* நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், சேவகனாய் இருக்கிறான் இறைவன். அவனே அருளைத் தருகிறான்.
* கோபம் என்னும் இருள் சூழும்போது, நம்மால் பயனுள்ள எச்செயலையும் செய்ய முடியாது. ஆனால், நேசமோ நேசத்தை உண்டாக்கும்.
* தெய்வமே சரணம் என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது மண்ணுலகிற்கே நன்மை தருவதாக அமையும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum