தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடவுள் நம்மை கவனிக்கிறார்

Go down

கடவுள் நம்மை கவனிக்கிறார் Empty கடவுள் நம்மை கவனிக்கிறார்

Post  birundha Sat Feb 09, 2013 4:18 pm

* கடல் பெரிதாக இருந்தாலும் தாகத்தைத் தணிப்பதில்லை. ஊற்று நீர் சிறிதாக இருந்தாலும் அது நம் தாகத்தைத் தணிக்க போதுமானது. அதுபோல, பலவிதமான சாதுர்யங்களைப் பேசும் சாமான்யனின் வீண்பேச்சு பயனற்றதாகும். ஆனால், அனுபவ ஞானியின் ஓரிரு வார்த்தைகள் மன ஆறுதலையும், சாந்தியையும் தரும்.
* கருவி எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தாலும் அதை இயக்கம் தானாக நடைபெறுவதில்லை. உலகம் இயற்கையாக இயங்குவது போல் தோன்றினாலும் அதன் பின்னால் இயக்கும் சக்தியாக இறைவன் இருக்கிறான்.
* உலகில் நம் ஒவ்வொருவரையும் கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். நம் பிரார்த்தனைகளை அவர் செவிகள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், கடவுளிடம் மனப்பூர்வமாக உங்கள் பிரார்த்தனைகளை முன்வையுங்கள்.
* வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்று இரு எதிரெதிர் குணங்கள் உலகில் இருக்கின்றன. இவ்விரு அனுபவங்களும் கடவுளை உணர்ந்த பின் நம்மை பாதிப்பதில்லை.
* இறைவன் சத்தியத்தையே தன் இருப்பிடமாக கொண்டிருக்கிறான். சத்தியமும் இறைவனும் வேறுவேறல்ல. சத்தியத்தைக் கடைபிடிப்பவன் தெய் வத்தையே சரணடைந்தவனாகிறான்
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum