தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்

Go down

முகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ் Empty முகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்

Post  ishwarya Sat Feb 09, 2013 12:50 pm

Facial Massage
மனித உடலில் முக்கிய பகுதியாக கருதப்படுவது முகம். முகத்திற்கு அழகூட்டுவதற்கு எண்ணற்ற கிரீம்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகு நிலையங்கள் பலவும் முகத்திற்கு பொலிவூட்ட பல வித உபயங்களை கையாளுகின்றன. அதில் முக்கியமானது முக மசாஜ். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பொலிவை கூட்டுகிறது.

மசாஜ் செய்ய அழகு நிலையங்களுக்குத்தான் செல்லவேண்டும் என்பதில்லை. நாமே நமது முகத்தை வீட்டிலேயே மசாஜ் செய்து கொள்ளலாம். முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்தால் முகத்தின் அழகு அதிகரிக்கும்.

கவனம் அவசியம்

முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்திற்கு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஊட்டம் தரும் தயிர்

பஞ்சில் கிலென்சிங் மில்க் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள். பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. அவரவர் முகத்திற்கு பொருத்தமான க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக் கொள்ளுங்கள்.

கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுகி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.

வெது வெதுப்பான நீர்

மசாஜ் செய்து முடித்ததும் இரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். பிறகு சிறுது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு நொறுநொறுப்பான பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடங்கள் வரை கரகரப்பாக தேய்க்க வேண்டும்.

கரும்புள்ளிகளை நீக்கவேண்டும்

பின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும்.

யார் செய்யலாம்

மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது.எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள். பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். அப்புறம் பாருங்கள் உங்கள் முகம் பள பளப்பாய் ஜொலிக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum