தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரகாசமாக முகம் வேண்டுமா? 'வெள்ளரி ஃபேஸ் பேக்' போடுங்க!!!

Go down

பிரகாசமாக முகம் வேண்டுமா? 'வெள்ளரி ஃபேஸ் பேக்' போடுங்க!!! Empty பிரகாசமாக முகம் வேண்டுமா? 'வெள்ளரி ஃபேஸ் பேக்' போடுங்க!!!

Post  ishwarya Sat Feb 09, 2013 11:50 am

Fucumber Face Mask
முகத்தை அழகாக, பிரகாசமாக வைக்க பல வகையான ஃபேஸ் பேக்குகள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் சிறந்த ஒரு ஃபேஸ் பேக் என்று சொன்னால் அது வெள்ளரிக்காய் வைத்து செய்வது தான் என்று சொல்லலாம். ஏனென்றால் எந்த ஒரு ஃபேஸ் பேக் செய்தாலும், இறுதியில் வெள்ளரிக்காயை வைத்து அதை முடிக்கிறார்கள். அப்படி இருக்க இந்த வெள்ளரிக்காயை வைத்தே ஃபேஸ் பேக் செய்தால் எப்படி இருக்கும்?

ஏனெனில் வெள்ளரிக்காயில் நிறைய நன்மைகள் இருக்கிறது. இதை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்வதால் சருமமானது இறுகி, வலுவடைகிறது. மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவற்றை எளிதாக நீக்குகிறது. இதனால் சருமமானது பொலிவுடன், பிரகாசமாக இளமை தோற்றத்தைத் தருகிறது. அத்தகைய வெள்ளரிக்காயை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

எப்படியெல்லாம் 'வெள்ளரி ஃபேஸ் பேக்' செய்யலாம்?

1. வெள்ளரிக்காயை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், தயிர் மற்றும் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின் அதனை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

2. வறண்ட சருமம் உள்ளவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் உடன் சிறிது எலுமிச்சைப்பழசாற்றை விட்டு, முட்டையின் வெள்ளை கருவை அதில் விட்டு முகத்தில் தடவி 20-25 நிமிடம் விட்டு காய வைத்து, பின் கழுவவும். இதனால் முகத்தில் பிம்பிள் இருந்தால் அது மறைந்துவிடும்.

3. 4-5 டேபிள்ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்டை, தேன் மற்றும் எலுமிச்சைப்பழசாற்றுடன் கலந்து, புதினாவை அரைத்து அத்துடன் சேர்த்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், முகமானது புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன், இளமையோடும் காட்சியளிக்கும்.

4. வெள்ளரிக்காய் ஜூஸை 2-3 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 10-12 துளி ரோஸ் வாட்டரை க்ளேயுடன் சேர்த்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். நிறைய நேரம் ஊற வைத்து விட வேண்டாம், இல்லையென்றால் முகத்தில் சுருக்கங்கள் வந்துவிடும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கும் பிம்பிளை அகற்றும்.

5. வெள்ளரிக்காய், பேரிக்காய், தக்காளி ஆகியவற்றை நன்கு அரைத்து, அதோடு சிறிது தேன் விட்டு கலந்து, முகத்தில் தடவி 20 25 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் முகமானது மென்மையாகவும், முகத்தில் இருக்கும் அழுக்கும் அகன்று பொலிவோடு காணப்படும்.

இவ்வாறெல்லாம் செய்து பாருங்கள், முகமானது அழகாக, பொலிவாக, மென்மையாக இருப்பதோடு, புத்துணர்ச்சியோடும் மின்னும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பனிகாலத்துல சருமம் பொலிவிழந்து இருக்கா? ஆரஞ்சு ஃபேஸ் பேக் போடுங்க...
» சும்மா அழகா மின்னனுமா? பாதாமை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க...
» ரோஜாப்பூ நிறம் வேண்டுமா? குங்குமப்பூ ஃபேஸ் பேக் போடுங்க...
»  ரோஜாப்பூ நிற கன்னங்கள் வேண்டுமா? ரோஸ் ஃபேஸ் பேக் போடுங்க….
» பொலிவான சருமம் வேண்டுமா? காய்கறிகளை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum