தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சருமம் வறண்டு, சொரசொரப்புடன் இருக்கிறதா? கிளிசரின் யூஸ் பண்ணுங்க!!!

Go down

சருமம் வறண்டு, சொரசொரப்புடன் இருக்கிறதா? கிளிசரின் யூஸ் பண்ணுங்க!!! Empty சருமம் வறண்டு, சொரசொரப்புடன் இருக்கிறதா? கிளிசரின் யூஸ் பண்ணுங்க!!!

Post  ishwarya Fri Feb 08, 2013 1:06 pm

Glycerin
சருமத்தை பராமரிக்க எத்தனையோ அழகுப் பொருட்களை பயன்படுத்துவோம். ஆனால் அவற்றில் கிளிசரின் மிகவும் சிறந்த சருமத்திற்கு வேண்டிய ஈரப்பதத்தை தரும் அழகுப் பொருள். இது ஒரு காஸ்மெடிக் உபயோகத்திற்கு மட்டும் பயன்படாமல், ஒருசில சரும பராமரிப்பிற்கு ஏற்ற மருத்துவ குணம் வாய்ந்த பொருளும் கூட. ஆனால் இந்த பொருளை எப்போதும் நீர்ம நிலையில் இருப்பதையே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த கிளிசரினை எப்படி பயன்படுத்தினால், சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, அழகாகவும் இருக்கும் என்பதை அழகியல் நிபுணர்கள் கூறுவதை சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

முக வறட்சியை தடுக்கும் கிளிசரின் ஃபேஸ் மாஸ்க்ஸ்...

கிளிசரின் மற்றும் தேன் : ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரினை கலந்து, முகத்திற்கும், கழுத்திற்கும் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் ஈரப்பசை இருப்தோடு, முகமும் அழகாய் மின்னும்.

கிளிசரின் மற்றும் வாழைப்பழம் : பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் கிளிசரின் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் மசித்த வாழைப்பழத்தை போட்டு, கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் வாழைப்பழத்தில் உள்ள கனிமப் பொருட்கள் சருமத்திற்கு கிடைப்பதால், சருமம் மாசற்று அழகாக பொலிவோடு இருக்கும்.

கிளிசரின் மற்றும் ஓட்ஸ் : 3-4 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை நன்கு அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கிளிசரின் விட்டு, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் போல் தேய்க்கவும். பின் அதனை 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த முறையால் கிளிசரின் முகத்திற்கு ஈரப்பசையை அளிப்பதோடு, ஓட்ஸ் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.

கிளிசரின், முட்டை மற்றும் எலுமிச்சை : ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் 3-4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, 10-25 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தின் நிறம் சற்று கூடுவதோடு, ஈரப்பசையும் கிடைக்கும்.

களிமண் மற்றும் கிளிசரின் : எப்படி கிளிசரின் சருமத்திற்கு சிறந்ததோ, அதேப் போல் களிமண்ணும் சிறந்தது. இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு 1 டேபிள் ஸ்பூன் களிமண் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கிளிசரினை கலந்து, முகத்திற்கு தடவி, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க்கால் சருமம் ஈரப்பசையுடன், மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.

ஆகவே இவ்வாறெல்லாம் செய்து முகத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் தான் செய்ய வேண்டும். அதற்கு மேல் செய்தால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum