சனிப் பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்
Page 1 of 1
சனிப் பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்
அடிக்கடி கற்பனை, கனவுகளில் மிதக்கும் நீங்கள் மனசுக்குள்ளேயே புதுத் திட்டங்கள் போட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை படாதபாடுபடுத்தி வந்த சனி பகவான் இப்போது 26.09.2009 முதல் 21.12.2011 வரை உள்ள காலகட்டங்களில் 5ஆம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம் விலகும்.
இனி எந்த வேலையையும் விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்குள் அடங்கிக் கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும். தைரியம் பிறக்கும். சோகமான முகம் மலரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிய சண்டை வந்ததே! சில தம்பதியர்கள் சந்தேகத்தால் பிரிந்தீர்களே! அந்த அவல நிலை இனி மாறும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள்.
தாயாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். அவரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகள் ஸ்தானத்தில் சனி அமர்வதால் பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களை திணிக்காதீர்கள். அவர்களின் போக்கில் விட்டுப் பிடியுங்கள். சில சமயங்களில் பாதை மாறி போக நேரும். உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்த, பந்தங்கள் மெச்சும் படி திருமணத்தை நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். உங்களுக்குள் வீண் குழப்பத்தையும், சிக்கல்களையும் உண்டாக்கிய சிலரை இனி தவிர்ப்பீர்கள்.
மூட்டு வலி, தலைச்சுற்றல் எல்லாம் நீங்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டு பல நேரங்களில் இப்படியெல்லாம் பேசி இருக்கக் கூடாது என வருந்தி வதங்கினீர்களே! இனி மற்றவர்கள் மனம் புண்படாத படி பேசுவீர்கள்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். புது வீடு கட்டி குடியேறுவீர்கள்.
உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் எதிர்பாராத பணவரவு, பொருள் சேர்க்கை, உயர் பதவி, சமூக அந்தஸ்து என யாவும் கிட்டும்.
உங்களின் சப்தம விரையஸ்தானாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். சொத்து சேரும்.
வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை உள்ள காலக்கட்டத்தில் சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் உறவினர் பகை, வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படக்கூடும்.
சனி பகவான் ஏழாம் வீட்டை பார்ப்பதால் முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வாக்கு ஸ்தானத்தையும் பார்ப்பதால் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வழக்கில் வெற்றி கிட்டும்.
அக்கம், பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். யோகா, தியானம் செய்யுங்கள். மனஅமைதி கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சரக்குகள் உடனுக்குடன் விற்றுத் தீரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்கள் உங்கள் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வார்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.
உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களை குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டமே இருந்ததே! இனி உங்கள் சேவையை எல்லோரும் மதிப்பர். நீங்கள் கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! படிப்பை தொடர்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கலைஞர்களே! மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும்.
இந்த சனிப்பெயர்ச்சி கடன் பிரச்சனைகளிலிருந்து மீளச் செய்வதுடன் புது அத்தியாயத்தை தொடங்குவதாக அமையும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம்
» சனிப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்
» சனிப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்
» சனிப் பெயர்ச்சி பலன்கள் (21.12.2011 முதல் 16.12.2014)வரை
» ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் : ரிஷபம்
» சனிப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்
» சனிப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்
» சனிப் பெயர்ச்சி பலன்கள் (21.12.2011 முதல் 16.12.2014)வரை
» ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள் : ரிஷபம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum