தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது: ரோஜா

Go down

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது: ரோஜா Empty பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது: ரோஜா

Post  ishwarya Fri Mar 29, 2013 1:06 pm

ஹைதராபாத்: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துவிட்டது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி வெறும் உற்சவர் போல வலம் வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா மேலும் கூறியதாவது: டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதேபோல் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அரசியலிலும், அதிகாரத்திலும், உயர் பதவியில் இருக்கும் பெண்கள் இதனை தடுக்க முன் வரவேண்டும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யாமல் கோவில் உற்சவர் சிலை போல் உள்ளனர். மேலும் இந்த விசயத்தில் கருத்து கூறிய ஆந்திரமாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சத்யநாராயாணாவை வன்மையாக கண்டிப்பதாகவும் ரோஜா கூறினார். ஆந்திராவில் உள்துறை மந்திரியாக இருக்கும் சபீதா இந்திரா ரெட்டி தொகுதியிலேயே ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாரே தவிர தடுக்க வழி இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க ஆந்திர முதல்வர் கிரண்குமாரும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. உயர்ந்த பதவியில் இருப்போர் மற்றவர்களை போல இந்த சம்பவத்துக்கு நானும் வேதனைப்படுகிறேன் என்று சொல்வது வெட்ககேடானது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வேதனைப்பட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த விசயத்தில் சோனியாகாந்தி கோவில் உற்சவர் போல வலம் வருகிறார் என்றும் ரோஜா கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆராய ஐ.நா.சிறப்பு பிரதிநிதிகள் இந்தியா பயணம்
» எனக்குத் தலையில் அடிபட்டு விட்டது. மருத்துவமனையில் தையல் போட்டு அனுப்பினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கண்ணுக்கு வரும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது தெரிந்தது. என் வலது கண் பார்வை மீள ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.
»  என் வயது 18. முன் கோபம் என்னையும் மீறி நெருப்பாகி பலரை என்னிடமிருந்து விலக்கி விட்டது. எனது மனநிலை மிகமிக மோசமாகி விட்டது. ஒருசமயம் என் உயிரைப் போக்கிக்கொள்ளும் அளவுகூட சென்று விட்டேன். இந்நிலையில் உங்கள் ஆன்மிக மலரை படிக்க நேர்ந்தது. நான் நானாக வாழவும்,
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum