தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரயில் கழிவறையில் வாலிபருடன் கல்லூரி மாணவி உல்லாசம்!

Go down

ரயில் கழிவறையில் வாலிபருடன் கல்லூரி மாணவி உல்லாசம்! Empty ரயில் கழிவறையில் வாலிபருடன் கல்லூரி மாணவி உல்லாசம்!

Post  meenu Sat Mar 16, 2013 12:37 pm


Published On: Thu, Jun 28th, 2012
இந்தியா / சமுதாய சீர்கேடுகள் / சர்வதேசம் | By admin
ரயில் கழிவறையில் வாலிபருடன் கல்லூரி மாணவி உல்லாசம்!


0


நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் ரயிலில் உல்லாசமாக இருக்க வந்த காதல் ஜோடியை போலீசார் பிடித்தனர்.

நாகர்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள யார்டு பகுதி மற்றும் பிளாட்பாரங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். கோட்டாறு ரயில் நிலையத்தில் ஒதுக்குபுறமாக நிறுத்தப்பட்டு இருக்கும் ரயில்களில் ஆள் நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது காவல்துறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் அவ்வப்போது சோதனை மேற்கொள்வது வழக்கம்.

கடந்த வாரம் யார்டு பகுதியையொட்டி நிறுத்தப்பட்டு இருந்த காலி ரயில் பெட்டி ஒன்றில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க வாலிபரும், 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும் ஏறினர். ரயில் பெட்டியில் ஏறிய அவர்கள், நேராக கழிவறை பெட்டிக்குள் புகுந்தனர். இதை பார்த்த சிலர் அங்கு சோதனையில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று கழிவறை கதவை தட்டினர்.

சில வினாடிகள் தாமதத்துக்கு பிறகு அந்த வாலிபரும், இளம்பெண்ணும் கழிவறை பெட்டியில் இருந்து ஆடைகள் கலைந்த நிலையில் வெளியே வந்தனர். அவர்கள் வந்த கோலத்தை வைத்தே உள்ளே என்ன நடந்தது என்பதை போலீசார் யூகித்து கொண்டனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த இளம்பெண் கல்லூரி மாணவி என்பதும், அந்த வாலிபர் மெக்கானிக் என்பதும் தெரிய வந்தது. இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாக தெரிவித்தனர். பின்னர் அந்த இளம்பெண்ணின் எதிர்கால வாழ்வு கருதி போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இது குறித்து ரயில்வே பணியாளர் ஒருவர் கூறுகையில், காலியாக, ஒதுக்குப்புறமான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ரயில் பெட்டிகளில் இது போல் அடிக்கடி ஜோடிகள் ரகசியமாக வந்து உல்லாசமாக இருக்கிறார்கள்.

ரயில் நிலையம் பரந்து விரிந்த நிலையில் இருப்பதால் யார் கண்ணிலும் அவர்கள் எளிதாக சிக்குவ தில்லை. இப்படி வருபவர்களில் இளம்காதல் ஜோடிகளும் இருக்கிறார்கள். காவல்துறையி னர் பிடித்து எச்சரித்து அனுப்பிய வண்ணம் உள்ளனர் என்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்லூரி மாணவி 4 வாலிபர்களுடன் உல்லாசம்: வீடியோவும் எடுக்கப்பட்டதாம்!
» டெல்லியில் மீண்டும் பரபரப்பு! கல்லூரி மாணவி கடத்தி கற்ழிப்பு! 4 பேர் கும்பல் அட்டகாசம்!
» கேரளத்திலும் கருப்புக் கொடி – கழிவறையில் ஒளிந்த அசின்!
» சேலத்தில் ரயில் மறியல்: 50 பேர் கைது
» அமெரிக்க வாலிபருடன் அசின் காதல்: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum