தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கணவர் கண்முன்னால் கற்பழிக்க முயற்சி! டெல்லியில் இளம்பெண் சுட்டுக்கொலை!

Go down

கணவர் கண்முன்னால் கற்பழிக்க முயற்சி! டெல்லியில் இளம்பெண் சுட்டுக்கொலை! Empty கணவர் கண்முன்னால் கற்பழிக்க முயற்சி! டெல்லியில் இளம்பெண் சுட்டுக்கொலை!

Post  meenu Wed Mar 13, 2013 2:40 pm



48


gun-murderகணவர் கண்முன்பே கற்பழிக்கும் முயற்சியில் இளைஞர் ஒருவரால் இளம்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

டெல்லி புறநகர் பகுதியான பாஜன்புராவைச் சேர்ந்தவர் புஜா (வயது23). இவரது கணவர் மோகன் பிரசாத். நேற்று இரவு 8 மணியளவில் புஜா தனது கணவருடன் ரிங்ரோட்டில் உள்ள சாரை காலேகான் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அந்த இடம் மாநகர பஸ் பணிமனை மற்றும் ஹசரத் நிஜாமுதீன் ரெயில் நிலையம் அருகே உள்ள பகுதியாகும். மக்கள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் புஜா சென்றபோது முனிஷ் யாதவ் என்பவர் குடிபோதையில் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்.

இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முனிஷ் யாதவ் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் புஜாவை சரமாரியாக சுட்டார். இதில் குண்டுகள் பாய்ந்து அவர் அதே இடத்தில் இறந்தார். தனது கண் முன்பே மனைவியை சுட்டுக் கொன்றதால் மோகன் பிரசாத் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த அங்கு நின்ற போக்கு வரத்து போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே முன்ஷி யாதவை பிடித்தார். போலீஸ் விசாரணையில் அவன் பீகார் மாநிலம் சாக்ராஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சம்பவம் நடந்ததாகவும் மானபங்க புகார் எதுவும் தங்களுக்கு வர வில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

டெல்லியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். அதற்குள் டெல்லிய்யில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பது டெல்லி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாயாவதி கட்சி முக்கிய பிரமுகர் டெல்லியில் சுட்டுக்கொலை
» சென்னையில் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி மீது கற்பழிக்க முயற்சி
»  Published On: Mon, Nov 19th, 2012 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் / சர்வதேசம் | By admin வீடு புகுந்து கற்பழிக்க முயன்ற வாலிபரின் நாக்கை கடித்துத் துப்பிய இளம்பெண்!
»  மராட்டிய மாநிலத்தில் பள்ளி முதல்வர் சுட்டுக்கொலை மகளின் காதல் விவகாரத்தால் தந்தை வெறிச்செயல்
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum