தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது

Go down

 கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது Empty கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது

Post  ishwarya Fri May 24, 2013 12:34 pm

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நேற்று துவங்கியது. சர்க்கார்பதியை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் இருந்து சுமார் 80அடி உயர மூங்கில் கொண்டு வரப்பட்டு ஆழியார் ஆற்றங்கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கோயில் வளாகத்தில் கொடிமரம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் சிறப்பு பூஜைகளும், இரவில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை வருகிற 23ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு முக்கோணம் பகுதி அருகே ஆழியார் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள மயானத்தில் நடக்கிறது. 24ம் தேதி காலை 7 மணிக்கு சக்தி கும்ப ஸ்தாபனம் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மகாபூஜையும் நடக்கிறது. 25ம் தேதி மாலை சித்திரத் தேர் வடம் பிடித்தல் மற்றும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தலும் நடக்கிறது. அதன்பின் மறுநாள் 26ம் தேதி காலை 8.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» மயிலை நவசக்தி விநாயகர் கோயில் திருவிழா
» மாசாணியம்மன் கோயில் - ஆனைமலை
» மாசாணியம்மன் கோயில் - ஆனைமலை
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum