தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்ணையாறு சங்கமத்தில் பாடலீஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரி

Go down

பெண்ணையாறு சங்கமத்தில் பாடலீஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரி Empty பெண்ணையாறு சங்கமத்தில் பாடலீஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரி

Post  ishwarya Fri May 24, 2013 12:30 pm

ி

பெண்ணையாறு சங்கமத்தில் பாடலீஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரிதை அமாவாசை தினத்தை முன்னிட்டு, தேவனாம்பட்டினம் பெண்ணையாறு சங்கமத்தில் ஞாயிற்றுக்கிழமை பாடலீஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர்.

கடலூரில் கடலும், தென்பெண்ணையாறும் சங்கமிக்கும் இடத்தில் தை அமாவாசை தினத்தில் சங்கு தீர்த்தவாரி நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு சங்கு தீர்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தது.

திருவிளையாடல் புராணத்தில் மீனவர் குல பெண்ணாக அவதாரம் எடுக்கும் பார்வதி தேவியை மணக்கும் சிவபெருமானுக்கு, பார்வதிதேவி பிறந்த குலத்தைச் சேர்ந்த பர்வதராஜ குல மக்கள் (மீனவர்கள்) மருமகனான சிவபெருமானுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தில் இங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

தீர்த்தவாரியை முன்னிட்டு பாடலீஸ்வரர் கோயிலில் இருந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மனோன்மணி அம்பிகை சமேத சந்திரசேகர சுவாமிகள், வண்டிப்பாளையம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தேவனாம்பட்டினம் கடலுக்கு எடுத்து வரப்பட்டனர்.

மீனவர் கிராம மக்கள் வரவேற்று வழிபாடு செய்தனர். பின்னர் அங்கிருந்து மீனவர் கிராம மக்கள், சுவாமி சிலைகளை கடலுக்கு சுமந்து சென்றனர்.

அங்கு அஸ்திரதேவர்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கடலில் புனித நீராட்டு விழா நடந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் அஸ்திர தேவர்களுடன் கடலில் புனித நீராடினர். இதைத் தொடர்ந்து அனைத்து வீதிகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ÷சங்கு தீர்த்தவாரியை முன்னிட்டு, தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum