தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

களுதாவளைப் சுயம்புலிங்கப் பிள்ளையார் அற்புதங்கள் செய்வார்

Go down

களுதாவளைப் சுயம்புலிங்கப் பிள்ளையார் அற்புதங்கள் செய்வார்  Empty களுதாவளைப் சுயம்புலிங்கப் பிள்ளையார் அற்புதங்கள் செய்வார்

Post  ishwarya Wed May 22, 2013 5:55 pm

களுதாவளைப் சுயம்புலிங்கப் பிள்ளையார் என்றாலே அனைவருக்கும் ஒரு ஈர்ப்புதான் அந்த வகையில் பிள்ளையாரின் அற்புதங்கள் அருள்மூலம் ஈர்க்கப்படவன் என்ற ரீதியில் நானும்ஒருவன் அதனால்தான் இந்த பதிவை இடுகின்றேன் இலங்கையின் கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே இயற்கை எழில் நிறைந்த வெற்றிலை செய்கைக்கு பெயர் பெற்ற, செல்வச் செழிப்பு மிக்க புண்ணிய பூமியாக விளங்குகின்ற களுதாவளை பகுதியில் மூர்த்தி,தலம்,தீர்த்தம் என முறையே அமையப் பெற்று நாடி வருகின்ற பக்தர்களின் குறை தீர்க்கும் தெய்வமாக வீற்றிருக்கின்றார் களுதாவளைப் பிள்ளையார். ஆரம்ப காலத்தில் வேடர்களின் வெற்றிலை சடங்கு செய்யும் இடமாக இவ்விடம் சிறப்பு பெற்றிருக்கின்றது.அதேபோன்று கதிர்காம யாத்திரை செய்வோர் தங்கி நின்று தமது கடமைகளை முடித்துச் செல்லும் ஒரு இடமாகவும் களுவை நகர் போற்றப்பட்டிருப்பதாக கல்வெட்டு சுட்டிக்காட்டுகின்றது. இவ்வாறாக கதிர்காம யாத்திரை செல்ல வந்து தங்கி நின்று பூஜை முடித்து புறப்பட தயாரான போது சிறிய லிங்கம் ஒன்றை யாத்திரை செல்ல வந்த குருமார் கண்டு அதனை தம்முடன் எடுத்துச் செல்ல முற்பட்ட போது அது நிலத்தின் அண்டம் நோக்கி சென்றிருக்கின்றது.அதனால் அந்த லிங்கத்தை கொண்டு செல்லும் முயற்சி கைவிடப்பட்டது.அதன் பின்பு கிராம மக்கள்அந்த லிங்கத்தை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்த பொழுது அதிலிருந்து சலம் கொதித்ததாக கூறப்படுகின்றது. பின்பு அந்த இடத்தில் கொத்துப் பந்தல் அமைத்து வழிபடத்தொடங்கியதாக கூறப்படுகின்றது களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் அற்புதங்கள் பல நிகழ்த்தி அற்புத செய்திருக்கின்றார்.பிறப்பிலே வாய் பேச முடியாத பிள்ளைகளுக்கு பேச பழக்குவிப்பவர்,நடக்க முடியாதவர்களுக்கு நடை பயிற்றுவிப்பவர்,குழந்தைப் பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு அந்த வரமும் வாரி வழங்குபவர்,எத்தகைய வியாதியாக இருந்தாலும் வைத்தியர்களால் கைவிடப்பட்ட பின்பு களுதாவளை பிள்ளையாரை நாடி வந்தவுடன் அந்த நோய் தீர்க்கப்படுவதும் நேர்த்திக்கடன் வைத்ததும் அது நீங்குவதும் அன்றாடம் இடம் பெற்றுக்கொண்டே வருகின்றது இத்தகைய வரலாறுகள் கொண்ட களுதாவளை பிள்ளையாரின் அற்புத செயல்கள் நமது நாடு கடந்தும் வெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் பலரும் அறிந்துள்ளனர்.பல வெளிநாட்டவரும் இந்த களுதாவளை பிள்ளையார் ஆலயத்துக்கு நேர்த்தி வைத்து அந்த நேர்த்திக் கடன் தீர்க்க ஆலயம்வருகின்றனர். இந்த மாம்பழத் திருவிழாவின் போது பல உண்மைத் தத்துவங்கள் வெளிப்படுத்தப்படும்.இதன் போது பயன்படுத்தப் படுகின்ற பூஜையில் இருக்கின்ற மாங்கனிகளை பெற்று உண்பதற்கு அடியார்கள் அலைமோதுவதையும் இங்கு காணலாம்.இந்த மாங்கனியானது பல குறைகளையும் நமது மானிட வாழ்க்கையில் இல்லாது செய்யும் சக்தி கொண்டவையாக பக்தர்கள் கருதுகின்றனர். குறிப்பாக களுதாவளை மக்களைபொறுத்தவரையில் எந்த செயலை செய்கின்ற பொழுதும் களுதாவளைப் சுயம்புலிங்கப் பிள்ளையாரை ஒரு கனம் நினைத்து விட்டுத்தான் செயலை செய்வது வழமை ஒவ்வொரு நாளும் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்திற்கு வருகின்ற அடியவர்களுக்கு குறைவே இல்லை அவர்கள் நேர்த்திக்காக வைக்கின்ற பொங்கலுக்கும் குறைவு இல்லை களுதாவளைப் சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு வாருங்கள் விக்கினங்கள் தீர்க்கும் விநாயகனை பாருங்கள்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum