போடி அருகே மாந்தோப்பில் 7 வயது சிறுமி கற்பழிப்பு: காமக்கொடூரனுக்கு தர்ம அடி
Page 1 of 1
போடி அருகே மாந்தோப்பில் 7 வயது சிறுமி கற்பழிப்பு: காமக்கொடூரனுக்கு தர்ம அடி
தேனி மாவட்டம், போடி அருகில் உள்ள அணைக்கரைபட்டி ஊராட்சிக்குட்பட்டது சோலையூர் கிராமம். இங்குள்ள ஒரு மாந்தோப்பில் போடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கி காவல் காத்து வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இவர்கள் தோப்பிலேயே சமைத்து சாப்பிட்டு இங்கேயே வசித்து வந்தனர். சிறுமி ஆடு மேய்த்து வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி(25). இவர் அடிக்கடி அந்த சிறுமியிடம் சிரித்த பேசி பழகி வந்துள்ளார்.
குடிபோதைக்கு அடிமையான முனியாண்டி சிறுமியிடம் தவறான முறையில் பேசி வந்ததை சிறுமி உணரவில்லை. நேற்று காலை சிறுமி ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது அங்கு வந்த முனியாண்டி மாந்தோப்பிலேயே அவரை பலவந்தமாக கற்பழித்து விட்டு தப்பியோடிவிட்டார்.
இதில் மயங்கிய சிறுமி அதே இடத்தில் கிடந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வடமலு என்ற பெண் சிறுமியை தூக்கி தனது வீட்டிற்கு அழைத்து வந்து குளிப்பாட்டி உணவு கொடுத்தார். பின்னர் வேறு உடை அணிவித்து அவரது வீட்டில் கொண்டு விட்டார்.
இரவில் அந்த சிறுமிக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டது. அவரது பெற்றோர்கள் அவரிடம் விசாரித்தபோது, முனியாண்டி தன்னிடம் தகாத முறையில் நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஊர் மக்கள் ஒன்றுகூடி முனியாண்டியை பிடித்து வந்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து குரங்கனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போடி டி.எஸ்.பி. அருள்அமரன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சண்முகசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்கள் தோப்பிலேயே சமைத்து சாப்பிட்டு இங்கேயே வசித்து வந்தனர். சிறுமி ஆடு மேய்த்து வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி(25). இவர் அடிக்கடி அந்த சிறுமியிடம் சிரித்த பேசி பழகி வந்துள்ளார்.
குடிபோதைக்கு அடிமையான முனியாண்டி சிறுமியிடம் தவறான முறையில் பேசி வந்ததை சிறுமி உணரவில்லை. நேற்று காலை சிறுமி ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது அங்கு வந்த முனியாண்டி மாந்தோப்பிலேயே அவரை பலவந்தமாக கற்பழித்து விட்டு தப்பியோடிவிட்டார்.
இதில் மயங்கிய சிறுமி அதே இடத்தில் கிடந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வடமலு என்ற பெண் சிறுமியை தூக்கி தனது வீட்டிற்கு அழைத்து வந்து குளிப்பாட்டி உணவு கொடுத்தார். பின்னர் வேறு உடை அணிவித்து அவரது வீட்டில் கொண்டு விட்டார்.
இரவில் அந்த சிறுமிக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டது. அவரது பெற்றோர்கள் அவரிடம் விசாரித்தபோது, முனியாண்டி தன்னிடம் தகாத முறையில் நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஊர் மக்கள் ஒன்றுகூடி முனியாண்டியை பிடித்து வந்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து குரங்கனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போடி டி.எஸ்.பி. அருள்அமரன் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சண்முகசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேரளாவில் கொடூரம்! 3 வயது தமிழக சிறுமி கடத்தி கற்பழிப்பு!
» ஏறாவூரில் 71 வயது முதியவரால் 11 வயது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்!
» 14 வயது சிறுமி கர்ப்பம்! சந்தேகத்தில் 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!
» 55 வயது கிழவனின் பாலியல் இச்சைக்கு நாலரை வயது சிறுமி!
» மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!
» ஏறாவூரில் 71 வயது முதியவரால் 11 வயது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்!
» 14 வயது சிறுமி கர்ப்பம்! சந்தேகத்தில் 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!
» 55 வயது கிழவனின் பாலியல் இச்சைக்கு நாலரை வயது சிறுமி!
» மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum