எதிர்கட்சிகள் அமளி: பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Page 1 of 1
எதிர்கட்சிகள் அமளி: பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி கடந்த 22-ந்தேதி தொடங்கியது. ஆனால் ஒருநாள்கூட இந்த கூட்டத் தொடரை மத்திய அரசால் சுமூகமாக நடத்த முடியவில்லை.
நிலக்கரி ஊழல், சீன ஊடு ருவல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் தினமும் எழுப்புவதால், பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கிய நிலையில் உள்ளது. நேற்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய சபாநாயகர் மீராகுமார், நிதி மசோதா, ரெயில்வே பட்ஜெட் திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் சம்மதித்தன.
நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம் என்பதாலும் அதற்கு ஒத்துழைக்க எதிர்க்கட்சிகள் சம்மதித்ததாலும் பாராளுமன்றம் இன்று மட்டும் சுமூகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக இன்றும் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. மக்களவை 11 மணிக்கு தொடங்கியதும், பிரதமர் பதவி விலககோரி பா.ஜ.க. எம்.பி.க்கள் சபை மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். இதனால் சபாநாயகர் மீராகுமார் மதியம் 12 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
மேல்சபையிலும் இதே போல பா.ஐ.க.வினர் அமளியில் ஈடுபட்டதால் சபையை 12 மணி வரை ஒத்திவைத்து ஹமீத்அன்சாரி உத்தரவிட்டார். 12 மணிக்கு மீண்டும் இரு சபைகளும் கூடின. அப்போது மேல்சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்தை சுட்டிக்காட்டி பா.ஜ.க.வினர் கடும் அமளி செய்தனர். மேல்சபை துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியால் எம்.பி.க்களை சமரசம் செய்ய இயலவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர் சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.
2 மணிக்கு இரண்டு சபைகள் மீண்டும் கூடியதும் எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நிலக்கரி ஊழல், சீன ஊடு ருவல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் தினமும் எழுப்புவதால், பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கிய நிலையில் உள்ளது. நேற்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய சபாநாயகர் மீராகுமார், நிதி மசோதா, ரெயில்வே பட்ஜெட் திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் சம்மதித்தன.
நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம் என்பதாலும் அதற்கு ஒத்துழைக்க எதிர்க்கட்சிகள் சம்மதித்ததாலும் பாராளுமன்றம் இன்று மட்டும் சுமூகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக இன்றும் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. மக்களவை 11 மணிக்கு தொடங்கியதும், பிரதமர் பதவி விலககோரி பா.ஜ.க. எம்.பி.க்கள் சபை மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். இதனால் சபாநாயகர் மீராகுமார் மதியம் 12 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
மேல்சபையிலும் இதே போல பா.ஐ.க.வினர் அமளியில் ஈடுபட்டதால் சபையை 12 மணி வரை ஒத்திவைத்து ஹமீத்அன்சாரி உத்தரவிட்டார். 12 மணிக்கு மீண்டும் இரு சபைகளும் கூடின. அப்போது மேல்சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்தை சுட்டிக்காட்டி பா.ஜ.க.வினர் கடும் அமளி செய்தனர். மேல்சபை துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியால் எம்.பி.க்களை சமரசம் செய்ய இயலவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர் சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.
2 மணிக்கு இரண்டு சபைகள் மீண்டும் கூடியதும் எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
» சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
» நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க எளிமையான மூச்சு பயிற்சி!
» நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க எளிமையான மூச்சு பயிற்சி!
» மலேசிய பாராளுமன்றம் கலைப்பு இந்த மாதம் பொதுத்தேர்தல்
» சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
» நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க எளிமையான மூச்சு பயிற்சி!
» நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க எளிமையான மூச்சு பயிற்சி!
» மலேசிய பாராளுமன்றம் கலைப்பு இந்த மாதம் பொதுத்தேர்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum