தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோவையில் அனுமதிபெறாத கட்டிடங்களை கண்டறிய 14 தாசில்தார்கள் தலைமையில் குழு

Go down

கோவையில் அனுமதிபெறாத கட்டிடங்களை கண்டறிய 14 தாசில்தார்கள் தலைமையில் குழு Empty கோவையில் அனுமதிபெறாத கட்டிடங்களை கண்டறிய 14 தாசில்தார்கள் தலைமையில் குழு

Post  ishwarya Thu May 02, 2013 6:10 pm

கோவை லட்சுமி மில் சந்திப்பில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உடல் கருகி பலியானார்கள். இதையடுத்து அதிகாரிகள் உஷாரானார்கள்.

கோவை மாநகரில் 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீத்தடுப்பு சான்றிதழ் பெறாமல் இயங்கி வருகின்றன என்று தீயணைப்புத்துறை அறிவித்தது. 201 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கலெக்டர் கருணாகரன் கூறினார். மாநகராட்சியும் தன் பங்குக்கு 55 கட்டிடங்கள் உரிய அனுமதிபெறவில்லை என்று அதிரடியாய் அறிவித்தது.

அனுமதி பெறாமல் செயல்படும் கட்டிட உரிமையாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட 55 கட்டிடங்களில் 27 கட்டிடங்களுக்கு நேற்று வரை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இன்று 3-வது நாளாக சோதனை நடத்தி ஆர்.எஸ்.புரத்தில் 4, பீளமேடு விமான நிலைய பகுதியில் 6 வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவையில் மேலும் அனுமதி பெறாமல் உள்ள வணிக வளாகங்களை கண்டறியவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் கலெக்டர் கருணாகரன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி 14 தாசில்தார்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் காவல் துறை, தீயணைப்புத்துறை, நகரமைப்புத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இன்றே தங்கள் ஆய்வுப்பணியை மேற்கொண்டனர். இதனால் விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக வளாக உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum