நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்போம்: சுஷ்மா
Page 1 of 1
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்போம்: சுஷ்மா
மக்களவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு மிக மோசமான, ஊழல்கள் நிறைந்த அரசாக, மன்மோகன் அரசு உள்ளது. அவரையும் சட்ட மந்திரியையும் காப்பாற்ற அரசு முயல்கிறது என்று சுஷ்மா குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி கமல்நாத் பேசும்போது, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜனதா வெளிநடப்பு செய்தது.
அதன்பின்னர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களவையில் இன்று நான் பேசியபோது, காங்கிரஸ் எம்.பி.க்களை எனக்கு எதிராக சோனியா காந்தி தூண்டிவிட்டு இடையூறு செய்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயக அமைப்புகள் மீதும் சோனியாவுக்கு நம்பிக்கை இல்லை. இந்த கூட்டத்தொடர் முடங்கியதற்கு சோனியா காந்தியே காரணம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு மாறாக சோனியா நடந்துகொள்கிறார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு காங்கிரஸ் கட்சி அனுமதிப்பது இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழ்வதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது.
நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இதேபோல் மக்களவை தலைவர் கூட்டும் அனைத்து கூட்டங்களையும் புறக்கணிப்போம். நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கூட்டும் கூட்டம், பொதுக்கணக்கு குழு கூட்டம் ஆகியவற்றையும் புறக்கணிப்போம். இன்று அவையில் அரசு நடந்து கொண்ட முறையாலேயே பா.ஜனதா இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி கமல்நாத் பேசும்போது, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜனதா வெளிநடப்பு செய்தது.
அதன்பின்னர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களவையில் இன்று நான் பேசியபோது, காங்கிரஸ் எம்.பி.க்களை எனக்கு எதிராக சோனியா காந்தி தூண்டிவிட்டு இடையூறு செய்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயக அமைப்புகள் மீதும் சோனியாவுக்கு நம்பிக்கை இல்லை. இந்த கூட்டத்தொடர் முடங்கியதற்கு சோனியா காந்தியே காரணம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு மாறாக சோனியா நடந்துகொள்கிறார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு காங்கிரஸ் கட்சி அனுமதிப்பது இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழ்வதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது.
நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இதேபோல் மக்களவை தலைவர் கூட்டும் அனைத்து கூட்டங்களையும் புறக்கணிப்போம். நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கூட்டும் கூட்டம், பொதுக்கணக்கு குழு கூட்டம் ஆகியவற்றையும் புறக்கணிப்போம். இன்று அவையில் அரசு நடந்து கொண்ட முறையாலேயே பா.ஜனதா இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தென் இந்திய சரக்கு கப்பல்களை புறக்கணிப்போம் கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மிரட்டல்
» டெல்லியில் சுஷ்மா சுவராஜ் வீட்டு முன் இளைஞர் காங்கிரசார் போராட்டம்
» சொத்து முழுவதையும் இழந்தாலும் தேச ஒற்றுமைதான் எனக்கு முக்கியம்: கமல் பேட்டி
» ஆசின் நடித்த படங்களை புறக்கணிப்போம் – உலகத் தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
» ‘தென் இந்திய சரக்கு கப்பல்களை புறக்கணிப்போம்’ கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மிரட்டல்
» டெல்லியில் சுஷ்மா சுவராஜ் வீட்டு முன் இளைஞர் காங்கிரசார் போராட்டம்
» சொத்து முழுவதையும் இழந்தாலும் தேச ஒற்றுமைதான் எனக்கு முக்கியம்: கமல் பேட்டி
» ஆசின் நடித்த படங்களை புறக்கணிப்போம் – உலகத் தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
» ‘தென் இந்திய சரக்கு கப்பல்களை புறக்கணிப்போம்’ கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மிரட்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum