தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லிபியா: வெளியுறவுத் துறையை அடுத்து நீதித்துறை அமைச்சகத்தையும் போராளிகள் முற்றுகையிட்டனர்

Go down

லிபியா: வெளியுறவுத் துறையை அடுத்து நீதித்துறை அமைச்சகத்தையும் போராளிகள் முற்றுகையிட்டனர் Empty லிபியா: வெளியுறவுத் துறையை அடுத்து நீதித்துறை அமைச்சகத்தையும் போராளிகள் முற்றுகையிட்டனர்

Post  ishwarya Thu May 02, 2013 5:52 pm

லிபியாவில் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக முன்னாள் அதிபர் முவம்மர் கடாபி கடந்த 2011ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பின்னர் அமைந்த ஆட்சியில், கடாபின் பதவிக்காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்களே அனைத்து துறைகளிலும் உயர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

அவர்களை பணி நீக்கம் செய்ய வகை செய்யும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கடாபிக்கு எதிராக போராடி நாட்டின் புது ஆட்சிக்கு வித்திட்ட பொதுமக்களின் தற்போதைய போராட்டத்தை எப்படி சமாளிப்பது? என்பது புரியாமல் அரசு விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 30 வாகனங்களில் நவீன துப்பாக்கிகளுடன் சென்ற பொதுமக்கள் லிபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சக கட்டிடத்தை முற்றுகையிட்டனர். அமைச்சக பணியாளர்களை வேலைக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்திய அவர்கள், தங்களது முற்றுகையை விலக்கிக் கொள்ள மறுத்துவிட்டனர்.

கடாபியின் ஆதரவாளர்களை பணி நீக்கம் செய்யாவிட்டால், இதர அமைச்சக கட்டிடங்களையும் விரைவில் முற்றுகையிடுவோம் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.

போராளிகளின் எச்சரிக்கையை லிபியா அரசாங்கம் பொருட்படுத்தாததால், 20 வாகனங்களில் இயந்திர துப்பாக்கிகள், விமானங்களை சுட்டு விழ்த்தும் பீரங்கிகளுடன் வந்த போராளிகள், நீதித் துறை அமைச்சகத்தையும் நேற்று முற்றுகையிட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum