தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செங்கலடி இரட்டைக்கொலை : காதலுக்கு தடையாக இருந்ததால் மகளே பெற்றோரை கொல்ல தீட்டிய திட்டம் !

Go down

செங்கலடி இரட்டைக்கொலை : காதலுக்கு தடையாக இருந்ததால் மகளே பெற்றோரை கொல்ல தீட்டிய திட்டம் !  Empty செங்கலடி இரட்டைக்கொலை : காதலுக்கு தடையாக இருந்ததால் மகளே பெற்றோரை கொல்ல தீட்டிய திட்டம் !

Post  ishwarya Tue Apr 30, 2013 2:06 pm

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்திலுள்ள விப்ரா பென்சி கோணர் உரிமையாளர் சிவகுரு ரகு அவரது மனைவியுடன் சேர்த்து கடந்த 7ம் திகதி நள்ளிரவு நேரத்தில் தனது வீட்டில் வைத்து மர்மான முறையில் வெட்டிக்கொலையப்பட்டிருந்தார். மர்மான இந்த இரட்டைக்கொலை தொடர்பில் பொலிஸார் இதுவரை பலரை கைது செய்து விசாரணை செய்த பொலிஸார் கொலையாளிகளை கண்டு பிடித்துள்ளனர்.

இறந்தவர்களின் 16 வயதான மகளே கொலையின் சூத்ரதாரி என்பது தெரியவந்துள்ளது. 16 வயதான மகளும் அவரது அதே வயதுடைய காதலனும் காதலனின் இரு நண்பர்களும் இணைந்து கொலையை புரிந்துள்ளமை விசாரணைகளில் தெளிவாகியுள்ளது.

காதலுக்கு தடையாக இருந்ததால் இந்த முடிவுக்கு வந்துள்ளாள் மகள். எனது பெற்றோரை கொல்! நான் இதுவரை 16 பேரை காதலித்துள்ளேன் இந்த பதினாறு காதலுக்கும் எனது பெற்றோரே தடையாக இருந்துள்ளனர். 17 வது உன்னையும் நான் இழக்க விரும்பவில்லை இவர்களை கொல் என்றாளாம் அவள்.

நண்பர்களுடன் பேசினான் காதலன். இரு நண்பர்கள்; இணங்கினார்கள். கொலைக்கான நாள் குறிக்கப்பட்டது.

அன்று 7ம் திகதி ரகு தனது மகளுடனும் மனைவியுடனும் காத்தான்குடிக்கு சித்திரைப்புத்தாண்டுக்கு ஆடைகள் வாங்கச் சென்றிருந்தார்.

மகளுக்கு புத்தாண்டுக்கு ஆடை வாங்கிக்கொடுக்கச் சென்றிருந்த ரகு மகள் தொலைபேசியில் கதைத்துக்கொண்டுவரும்போது, தனக்கு அவள் நேரம் குறிக்கின்றாள் என்பதை உணரவில்லை.

காத்தான்குடியில் நின்று காதலனை தொடர்பு கொண்ட மகள் வீட்டு திறப்பு எங்கே இருக்கின்றது என்றும் சாப்பாடு எங்கே இருக்கின்றது என்பதையும் காதலனுக்கு தெரிவித்தாள். வீட்டிற்கு சென்ற காதலன், சாப்பாட்டினுள் நித்திரை மாத்திரைகள் கரைத்து தூவிவிட்டு வெளியேறினான்.
மகளுக்கு 10 கடையேறி புத்தாண்டுக்கு உடுப்பு வாங்கி கொடுத்த களைப்பில் வீடு வந்த பெற்றோர் நித்திரை மாத்திரை கலந்த உணவை மூக்கு முட்ட அடித்துவிட்டு தூங்கினர்.

அவர்கள் தூக்கம் என்பதை உணர்ந்த மகள் காதலனின் கையடக்க தொலைபேசிக்கு அழைத்தாள். காதலனும் இரு நண்பர்களும் சுத்தியல்கள் கத்திகள் சகிதம் வந்தனர்.

கதவினை திறந்து தந்தையும் தாயும் உறங்கிக்கொண்டிருந்த அறையை திறந்து விட்டாள் அவள்.

முதலில் தாயை கொன்றனர்.

தந்தையை தூக்கிக்கொண்டு கிணற்றினுள் போடுவது என்பது திட்டம்.

தாயை கொன்றுவிட்டு தந்தையை கிணற்றினுள் போட்டுவிட்டால். நான் பொலிஸில் சாட்சி சொல்வேன். அப்பா அம்மாவை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது அவள் போட்டுக்கொடுத்த திட்டம். தென்னிந்தியப்படம் பார்க்கும் நம்ப பிள்ளையளுக்கு இன்னும் சொல்ல வேண்டுமா?

மனைவியின் தலையில் சுத்தியல் அடிச்சத்தம் கேட்ட ரகு கண்முழித்தார். ஆனால் அவரால் கண்முழித்து பார்க்க மட்டும் முடிந்தது எழுந்து நடக்க முடியவில்லை.

மூவரும் சேர்ந்து அடித்தனர். இருவரது கதையும் முடிந்தது. காதலன் நண்பர்களுடன் விடைபெற்றுச் சென்றான்.

மகளின் காதலுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழு விபரங்களுடன் மீண்டும் சந்திப்போம் ..

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம். -பேரின்பராஜா சபேஷ்
»  அதிக உடல் எடை கர்ப்பத்திற்கு தடையாக உள்ளதா?
» பெற்றோரை விடச் சிறந்தது
» ஹீரோ நட்பாக இருந்ததால் நெருக்கமான சீன் சூப்பர் : நீது சந்திரா பேட்டி
» கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் நடிகர் விவேக்குக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum