தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு)

Go down

ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு) Empty ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு)

Post  ishwarya Tue Apr 30, 2013 1:55 pm

பொதுபல சேனா இயக்கத்தினால் இன்று (16) விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், ‘இதுவரை பொதுபல சேனா சார்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அதன் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானஸார தேரர் அவர்களுக்கு இனிமேல்ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கும் அதிகாரம் இல்லை என்றும், அந்த அதிகாரம் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் அதன் உயர் பீட உறுப்பினர் திலந்த விதானகேவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில்,

‘இதுவரை பொதுபல சேனாவின் ஒரு பிரிவாக செயற்பட்டு வந்த ‘சிங்கள ராவய’ மற்றும் ‘ராவண பலய’ ஆகிய இயக்கங்கள் பொது பல சேனாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் செயற்பட்டமை, ஒழுக்கத்துடன் செயற்படாமை ஆகிய காரணங்களால் இவற்றுடனான சகல தொடர்புகளையும், 2013/04/10 ஆந் திகதி முதல் பொதுபல சேனா துண்டித்துள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த உயர்பீடக் கூட்டமானது கடந்த ஏப்ரல் 07ஆந் திகதி பொதுபல சேனாவின் செயலாளர் ஞானாஸார தேரர் தலைமையிலான குழு அமெரிக்கா சென்ற பின்னர், 9 ஆம் திகதி கூட்டப்பட்டே இந்த அவசர முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு குறித்த அறிக்கைகளையும் திலந்த விதானகேதான் விடுத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பொது பல சேனா அமைப்பின் கருத்துக்கு முஸ்லிம்கள் மறுப்பு
» பொது பல சேனா ஹலாலிலிருந்து நீங்கியது முட்டாள்தனம்! - பௌத்தர்களைக் காட்டிக் கொடுக்கும் செயல்!
» பொது பல சேனா இயக்கம் நாகத்தை வாலினால் பிடித்துக் கொண்டிருக்கிறது - தம்பர அமில தேரர்
» இன்னும் நல்ல நல்ல விளையாட்டுக்கள் அதிகாலையில் தான் இருக்கின்றன என்றும், பொது பல சேனா இயக்கம் ஹலாலை ஹராம் என்றும், ஹராத்தை ஹலால் காண்பிப்பதற்காக முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்லைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஏக
» இலவச பொருட்களை வழங்க மாணவர்களிடம் பணம் வசூல் செய்த தலைமை ஆசிரியர் திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் புதுசத்திரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன். இவர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்க ரூ.10

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum