தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெற்றோரிடையே முருகல், உயிர்துறந்தான் மைந்தன்!

Go down

பெற்றோரிடையே முருகல், உயிர்துறந்தான் மைந்தன்! Empty பெற்றோரிடையே முருகல், உயிர்துறந்தான் மைந்தன்!

Post  ishwarya Tue Apr 30, 2013 1:29 pm

தனது பெற்றோர் சதாவும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதால், மனமுடைந்துபோன பொறியியலாளரான மகன் பம்பலப்பிட்டிய காசல் வீதியிலுள்ள வீடொன்றின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பம்பலப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளவர் தொடர்மாடியின் 6 ஆவது மாடியில் வசித்துவந்த கங்காதன் குருதரன் (23) என்ற வாலிபனாவார். தற்கொலை செய்துகொண்டுள்ளவர் மோட்டார் வாகன நிறுவனமொன்றில் பொறியியலாளராக க் கடமையாற்றியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது பெற்றோர் அடிக்கடி சண்டையில் ஈடுபடுவதனால், இந்த இளைஞனின் உள்ளம் உடைந்துபோயுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். பெற்றோர் பிரச்சினையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஆத்திரம் தாங்கமுடியாமல், கையடக்கத் தொலைபேசி மூலமாக பெற்றோர் இருவருக்கும் குறுந்தகவல் அனுப்பிவிட்டு ஆறாவது மாடியிலிருந்து கீழே பாய்ந்து உயிர்துறந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கீழே விழுந்துள்ள அந்த இளைஞன் அவ்விடத்திலேயே இறந்துள்ளார்.

ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டிருந்த அந்த குறுஞ் செய்தியில், ‘நீங்கள் இருவரும் அடிக்கடி சண்டையிடுகிறீர்கள், அது எனக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது., நான் அதனை வெறுக்கிறேன். எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் கேட்க மறுக்கிறீர்கள். அதனால், நான் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்துவிட்டேன். என்னை மன்னிக்கவும்’ என்று இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum