தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வவுனியாவில் இரவு வகுப்புகளும் கைவிடப்பட்ட சட்ட நடவடிக்கைளும்

Go down

வவுனியாவில் இரவு வகுப்புகளும் கைவிடப்பட்ட சட்ட நடவடிக்கைளும் Empty வவுனியாவில் இரவு வகுப்புகளும் கைவிடப்பட்ட சட்ட நடவடிக்கைளும்

Post  ishwarya Tue Apr 30, 2013 1:02 pm

கடந்த ஆறு (06) மாதங்களாக வவுனியாவில் இரவு வகுப்புக்களை கல்வி நிலையங்களில் நடாத்தவும், ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புக்களை நடாத்தவும் இலங்கை பொலிஸ் அதிகாரிகளும், நீதிபதியும், முன்னாள் வவுனியா மாவட்ட அரச அதிபரும், பிரதேச செயலாளரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை மாணவர்கள் தத்தம் சமய அனுட்டானங்களை பின்பற்றவும், பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு இத்தகைய உத்தரவுகளை நாகரிகமான முறையில் சட்ட ரீதியாக அறிவித்திருந்தது.

ஆனால் இன்று அச் சட்டங்களையும், உத்தரவுகளையும் மீறி வகுப்புக்கள் நடைபெறுகின்றன. கிராமப் புறங்களில் கல்வி நிலையங்கள் சட்ட'ர்வமான தகவல்களை ஏற்றுக்கொண்ட போதும் வைரவபுளியங்குளம், குருமன்காடு பகுதிகளில் பிரசித்தி பெற்ற கல்வி நிலையங்களும், பிரசித்தி பெற்ற அசிரியர்களும் வகுப்புக்களை தன்னிச்சையாக நடாத்துவது அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

குறிப்பாக செட்டிகுளம் பகுதிகளில் இருந்து வவுனியா நோக்கி வரும் மாணவர்கள் 6.00 மணி வரை பஸ்ஸிற்காக காத்திருந்து செல்ல வேண்டிய நிலைப்பாடு உருவாகியிருக்கின்றது. இந் நிலையை சட்டங்களை உருவாக்கிய அதிகாரிகள் கண்டும் காணாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

வீனஸ் கல்லூரி, ஒக்ஸ்பொட் கல்வி நிலையம், சயன்ஸ் ஹோல், சீ.பி.ஏ கல்வி நிலையம், எக்ஸ்பிறஸ் கல்வி நிலையம் என்பன இத்தகைய குற்றச்சாட்டுக்குள் உள்ளாகியிருக்கின்றன என குறிப்பிடப்படுகின்றன. அதே வேளை சில தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் குழு வகுப்புக்களை இரவு 7.00 மணி வரை நடாத்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். இது குருமன்காடு பகுதியில் அதிகளவில் இடம் பெறுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

23.04.2013 அன்று மாலை 6.55 மணியளவில் பிரசித்தி பெற்ற கல்வி நிலையத்தில் வகுப்புக்களை முடித்துவிட்டு வீடு செல்ல பஸ்ஸிற்காக காத்திருந்த உயர்தர வகுப்பு பெண் தனது பொருளியல் ஆசிரியருடன் வீதியில் நின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். பாதுகாப்பிற்காக அவ் ஆசிரியர் நின்றிருந்தாலும், சமூகத்தின் பார்வை வேறு விதமாக அமையும் என்பதை பெற்றோர் சிந்திக்க வேணண்டும்.

இத்தகைய இரவு வகுப்புக்களின் பின் மாணவர்கள் வீடு செல்லும் போது மாணவ குழுக்களிடையே வன்முறைக் கலாச்சாரம் எழ வாய்ப்பு உள்ளதாக பிரபல கல்வி நிலையம் ஒன்றின் நிர்வாகி எமக்கு தெரிவித்துள்ளார்.

இத்தகைய வகுப்புக்கள் மட்டக்களப்பில் இடம்பெற்ற இரட்டைக் கொலை போன்று இன்னொரு அசம்பாவிதத்தை வவுனியாவில் ஏற்படுத்தாதிருக்க வேண்டும் என எமது சமூக வலைத்தளம் வேண்டி நிற்கின்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியாவில் சகோதரத்துவத்துக்கான மக்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்
» வவுனியாவில் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை' - சிவசக்தி ஆனந்தன்
» வவுனியாவில் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை' - சிவசக்தி ஆனந்தன்
» 15 நிமிடங்களில் உயிருடன் புதைக்கப்பட்ட சிசு மீட்பு: வவுனியாவில் சம்பவம்!
» வவுனியாவில் உயர் கல்வி வாய்ப்பு - வவுனியா IDM மாணவர்கள் பெருமிதம்......

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum