தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

3 வருடம் இழுத்தடிப்பார்; பாலா படத்தில் நடிக்க கதாநாயகர்கள் அச்சமா? விஷால், ஆர்யா பரபரப்பு பேச்சு

Go down

3 வருடம் இழுத்தடிப்பார்; பாலா படத்தில் நடிக்க கதாநாயகர்கள் அச்சமா? விஷால், ஆர்யா பரபரப்பு பேச்சு Empty 3 வருடம் இழுத்தடிப்பார்; பாலா படத்தில் நடிக்க கதாநாயகர்கள் அச்சமா? விஷால், ஆர்யா பரபரப்பு பேச்சு

Post  ishwarya Fri Apr 19, 2013 12:47 pm

பிரபல டைரக்டர் பாலா. இவர் “சேது”, “நந்தா”, “பிதாமகன்”, “நான் கடவுள்” போன்ற படங்களை இயக்கியுள்ளார். அனைத்துமே தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் பெற்றவை. ஆனால் இப்படங்களை இரண்டு, மூன்று வருடங்கள் என படப்பிடிப்பு நடத்தி இழுத்தடித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

தற்போது அவன்-இவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கின்றனர்.

பாலா மீதான குற்றச் சாட்டுகள் குறித்து ஆர்யா பேசியதாவது:-

அவன்-இவன் படத்தில் நடிக்க நான் சம்மதித்ததும் விமர்சனங்கள் கிளம்பின. ஏற்கனவே பிதாமகன் படத்தை 3 வருடம் எடுத்தார். திரும்பவும் அவர் கிட்டபோய் விழுகிறயே என்றார்கள். அவர்கிட்ட ஒரு படம் பண்ணுற திருப்தி வெளியில் பத்து படம் பண்ணினாலும் கிடைக்காது.

கேரக்டர்களை அற்புதமாக உருவாக்குபவர் பாலா. அவருடன் மேலும் 10 படங்கள் கூட பண்ணுவேன். சில படம் ஓடும். சில படங்கள் ஓடாது. ஆனால் அவன்-இவன் படத்தை யாராலும் ஒதுக்க முடியாது. அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது விஷால் ஒற்றைக்கண் வைத்து கஷ்டப்பட்டு நடித்தார்.
அவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.

விஷால் பேசியதாவது:-

ஒரு ஹீரோவை இன்னொரு ஹீரோ பாராட்டுவது அதிசயம். ஆர்யா என்னை மனதார பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் நான் நடிக்க காரணமே ஆர்யாதான். அவர்தான் பாலாவை சந்திக்க வைத்தார். கதை ரொம்ப பிடித்தது.

எனக்குள் ஒரு பசி இருந்தது. அதற்கு பாலா தீனி போட்டுள்ளார். என் வீட்டு வாசலில் ஒருத்தர் இஸ்திரி வண்டி வச்சிருக்கார். அவர் பாலா படத்தில் நடிக்கிறீர்களே படம் வர 3 வருடம் ஆகுமே என்று என்னிடம் கூறினார். இந்த படம் 1 வருடம் 3 மாதத்தில் முடிந்துள்ளது.

சினிமாவை கொச்சைப்படுத்துபவர்கள் சினிமாவில் இருப்பவர்கள்தான். யாரையும் குறைவாக மதிப்பிடக்கூடாது. இந்த படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்துள்ளேன் என்றார்.

பாலா பேசும்போது, நான்கு படங்கள் இயக்கியுள்ளேன். எல்லா தயாரிப்பாளர் கிட்டயும் பிரச்சினைகளும், சண்டையும் ஏற்பட்டு இருக்கு. ஆனால் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் குழந்தை மனதுடையவராக தெரிந்தார். அவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து இப்படத்தை இயக்கியுள்ளேன் என்றார்.

டைரக்டர் பாலு மகேந்திரா, எழுத்தாளர் ராமகிருஷ்ணன், கவிஞர் நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகைகள் அம்பிகா, பிரபா மதுஷாலினி, ஜனனி அய்யர், டைரக்டர் ஜி.ஆர்.குமார், நடிகர் ஆர்.கே., தயாரிப்பாளர்கள் அல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum