தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்புப் புகார் – 80 வயது மூதாட்டி கொடுத்தார்

Go down

நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்புப் புகார் – 80 வயது மூதாட்டி கொடுத்தார் Empty நடிகர் விக்னேஷ் மீது நில அபகரிப்புப் புகார் – 80 வயது மூதாட்டி கொடுத்தார்

Post  ishwarya Tue Apr 16, 2013 6:14 pm

நடிகர் விக்னேஷ் மீது 80 வயது மூதாட்டி நில அபகரிப்புப் புகார் கொடுத்துள்ளார். சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று தனது வக்கீலுடன் வந்த வீரம்மாள் என்ற அந்த மூதாட்டி ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

அதில், எனது பெயர் வீரம்மாள், வயது 80 ஆகிறது. எனக்குச் சொந்தமாக ஈக்காட்டுத்தாங்கலில் 5000 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை நடிகர் விக்னேஷ் என்கிற அந்தோணி, மோசடியான பத்திரம் மூலம் அபகரித்துக் கொண்டார்.

நான் உயிருடன் இருக்கும்போதே இறந்து விட்டதாக போலியான சான்றிதழைத் தயாரித்து இந்த அபகரிப்பைச் செய்துள்ளார். அந்த நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று வீரம்மாள் கோரியுள்ளார்.

வீரம்மாளின் வக்கீல் கூறுகையில், விக்னேஷுடன் ஓய்வு பெற்ற டிஎஸ்பி வீரபாண்டியன் என்பவரும் இதற்கு உடந்தை என்றார். தற்போது இந்த நிலத்தில் விக்னேஷும், அவரது மனைவி உமா மகேஸ்வரியும் புதிய கட்டடம் கட்டி வருவதாகவும் வீரம்மாள் குற்றம் சாட்டியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum