பெருமாளுக்கு அபிஷேகம் நடக்காத கோவில்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
பெருமாளுக்கு அபிஷேகம் நடக்காத கோவில்
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் தொன்மை வாய்ந்த கோவிலாகவும், 108 வைணவ கோவில்களில் ஒன்றாகவும், கிருஷ்ணன் அவதார காலத்தில் கண்ணனின் பேரன் அனிருத்தனுக்கும், உஷைக்கும் திருக்கல்யாணம் நடந்த புண்ணிய தலமாகவும் விளங்குகிறது.
மேலும் இது ஆழ்வார்களில் பூதத்தாழ் வாராலும் பின் திருமங்கையாழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமாகும். இந்தகோவிலில் பெருமாளை வணங்கி புரூரவ சக்கரவர்த்தியும், புலியும் சாப விமோசனம் பெற்றனர் என்பது புராண வரலாறு. இங்கு பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது.
ஏனெனில் மூலவர் சுதையால் (மண்) செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு உள்ளது. எனவே பெருமாளுக்கு கற்பூர தீபாராதனை மட்டுமே செய்யப்படுகிறது. கோவில் கருவறைக்கு மேல் அமைந்துள்ள விமானம் சிறப்பு வாய்ந்தது. இதற்கு தேவசந்த விமானம் என்று பெயர். இந்த தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று பெருமைகளை உடையது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum