தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராசி கணபதியின் மகத்துவம்

Go down

ராசி கணபதியின் மகத்துவம் Empty ராசி கணபதியின் மகத்துவம்

Post  birundha Sat Apr 13, 2013 11:33 pm



எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. தடையாக உள்ளது. நான் ஒரு ராசியில்லாத ராஜா அல்லது ராணியாக இருக்கிறேன் என்கிறீர்களா? உங்களுக்கு ராசி கணபதி வழிபாடு மிக மிக முக்கியம். இதனால் உங்கள் கை ராசியை - யோகத்தை பட்டறிவோடு அதிகரித்து கொள் முடியும்.

எப்படி தோன்றினார்?

ஒரு சமயம் மேஷம் முதலான 12 ராசிகளும் ஸ்ரீ விநாயகப் பெருமானிடம் சென்று பாவங்களும் தோஷங்களும் உடைய மனிதர்களின் ஜாதக அமைப்பில் இடம் பெற்றுள்ள எங்கள் ஸ்தானங்களில் நவக்கிரகங்கள் வந்து அமர்ந்து தசா புக்திக் காலங்களில் யோக சுப யோக பலன்களைத் தரும் போது நாங்களும் யோக சஞ்சார காலத்தின் துன்பங்களை அனுபவிக்க வேண்டி உள்ளது.

ஆகவே இனிமேல் மனித ஜீவன்களின் கால பலன்களை அறிய எங்களை பயன்படுத்த வேண்டாம்.மகாபாரதத்தை தந்தம் ஒடித்து எழுதிய மாகபிரபுவே தாங்கள் தான் எமக்கு வேறொரு மார்க்கத் தைத்தந்தருள வேண்டும் என்றன. வேடிக்கையாக சிரித்த கண நாதர் பன்னிரு சிறுபிள்ளாய்! ராசி என்ற பெயர்தனை வைத்துள் நீங்கள் இல்லாவிட்டால் ஜாதகர்களுக்கு பலன்கள் யோகங்களை அறியும் வழி ஏது?

அவர்களின் கால கட்டங்களை அடையாளம் காட்ட வேண்டியது தர்மம் மட்டும் அல்ல உங்கள் கடமையும் கூட. பாவச்சுமை, தோஷ வடுக்கள் மறைந்திட என்மேல் ஒரு கணம் அமர்ந்து வெளிப்படுவீர்! அதன் பொருட்டு உங்களுக்கு சக்தி பிறக்கும் என்றார்.

உடனே பன்னிருவரும் அவரது உடல் முழுவதும் ஏறி அமர்ந்து கொண்டு நாங்கள் பெரும் பாக்கியம் செய்தோம் பிரபோ, என்றன. இதனால் ராசி கணபதி வெளிப்பட்டு, இந்த எனது உருவை வணங்கும் மனிதர்கள் யோக ஞான பாக்கியம் பெற்று அதிர்ஷ்ட கரமான வாழ்வும் பெற்று துர்தசை காலங்களிலும் நன்மையே அடைவார்கள் என்று வாழ்த்தினார். அவரது உடற்சக்தி வட்டத்தை ஆனந்தக்கூத்தாடி வந்த 12 ராசிகளும் தங்கள் இடங்களுக்கு சென்றன.

வழிபடும் விதம்.........

பக்தர்கள் ராசி கணபதியை வழிபடத் தொடங்கி விட்டால் அவர்களுக்கு அதிர்ஷ்டமான காலம் வருகிறது என்று பொருள்.மனிதர்கள் ஐஸ்வர்யங்களை அடைய தங்கள் வீடு, வியாபார இடம், தொழிë கூடங்களில் உயர்ந்த லாபங்கள் பெற்று சாதனை படைக்க ராசியோக கணபதியை ஒன்பது மலர்கள், கொழுக்கட்டை, முஷ்டி போதகம்,வடை,மஞ்சள் சாதம் வைத்து சுக்ல சதுர்த்தி, செவ்வாய், சனி, ஒருவரது ஜென்ம நாளில் வழிபட்டு பலன் அடையலாம்.

அக்னி வழிபாடு..............

தனி மனித வாழ்வில் கடன் தொல்லை, எதிரிகளால் தொழில் நட்டம், கொடுத்த பணம் திரும்ப வரவில்லை என்றும் குடும்பத்தில் கஷ்டம், கணவன், மனைவி பிரிவு ஏற்படுவதாக எண்ணுபவர்களுக்கு ராசி கணபதியின் அக்னி வழிவாடு என்னும் எளிமையான யக்ஞ பூஜாமுறை நற்பலன்களை உடன் தரவல்லது.

பதினாறு செங்கற்களுடன் அக்னி குண்ட செவ்வகம் வைத்து அதில் மணல் இட்டு மாவால் ஸ்வஸ்திகம் வரைந்து பலன் பெற வேண்டியவர் சுப நாளில் தங்களது குடும்ப ஜாதகங்களை ஒரு கலசம் நிறுத்தி அதன் முன் வைத்து யாக கூட்டு பொருள் 1 பாக்கெட், அரசு வன்னி கழித்துக்குச்சிகளை கொண்டு மூல மந்திர ஆவர்த்தி 108 தடவைகள் செய்தல் வேண்டும்.

கடன் தொல்லை தீர்வதற்கு இந்த வழிபாட்டை செய்து விட்டு மைத்ர முகூர்த்தத்தில் சிறு தொகை கொடுக்க காலக்கிரமத்திற்குள் கடன்கள் யாவும் அடையும். தொழிற்சாலையில் வியாபார லாபம் கிடைக்க வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிமுதல் 7 மணிவரை இந்த பூஜையை செய்த பிறகு ராசி கணபதி படத்தை மாட்டி வைத்து வழிபட்டு வர வேண்டும்.

கொடுத்த பணம் திரும்ப வருவதற்கு இந்த ராசி கணபதி வழிபாட்டை சுக்லசதுர்த்தி அன்று கருங்காலிக்கட்டை கொண்டு விஷேச திரவியங்களால் வழிபடல் வேண்டும். கணவன்-மனைவி பிரிந்தவர்கள் ஒன்று சேர துளசி மற்றும்தொட்டால் சுருங்கி சமித்தால் அக்னி யக்ஞம் செய்து நெற்றியில் ரட்சை இட்டுக்கொள்ள வேண்டும்.

இதை சனியன்று செய்யலாம். சொந்தமாக மனை, வீடு கட்ட முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆறு மாதத்தில் பணம், காசுகள் சேர்ந்து புதுமனை புகுவிழா என்னும் கிரகப்பிரவேசம் நடத்திட செவ்வாய் கிழமை நவ சமித்துக்களால் அக்னி பூஜை நடத்தி யாக சாம்பலை சொந்த மனையில்போட வேண்டும்.

வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் அந்த இடத்திலேயே இவ்வழிபாட்டை செய்ய வேண்டும். திருமணம் ஆகியும் பல ஆண்டுகள் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லை என்று வருந்தும் தம்பதியர் (கணவன்- மனைவியர்)களுக்கு முக்கியமாக கரு உண்டாகி குழந்தை பிறக்க சிலேத்தும நாடி(கர்பநாடி) அதிகமாகத் துடிக்கும் காலமறிந்து வியாழன், ஞாயிறு, திங்கள் மாலை வேளையில் இந்த வழிபாடு செய்து யாகத்தில் மீதமான நெய்யுடன் மலை வேம்பு, ரோஜா இதழ் கலந்து உண்ணவேëண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் உண்டாகி சாதுத்தன்மை உண்டாகி செயல்படாமல் வீட்டில் முடங்கி கிடத்தல், அதிக சக்தி, சூப்பர்பவர், முரட்டும்தனம், பள்ளிக்குச் செல்லாமை, கல்வியில் முன் னேற்றம் இல்லாமல் போனால் வாத நாடி அதிகம் துடிக்கும் கால மறிந்து (வியாழன், புதன், சனி மாலை) இந்த அக்னி வழிபாட்டைச் செய்து பாலாரிஷ்ட ரட்சை அணிந்து தியானம் சொல்லிவா நற்பலன் கிடைக்கும்.

நிலம் தொடர்பான வழக்குகளில்,பிரச்சனைகளில் வெற்றி அடை யவும் நோய்களால் வாட்டமும் கண்ட வர்களுக்கு வீரகணபதி வழி பாட்டுடன் இவரது அக்னி வழிபாடு செய்ய பலன் கிடைத்து விடும்.*
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum