நந்திதேவருக்கு முதல் வழிபாடு ஏன்?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
நந்திதேவருக்கு முதல் வழிபாடு ஏன்?
வேத கோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார். அப்போது வீணையை மீட்டிக் கொண்டு வந்த நாரதர் சிவபெருமானை வணங்கி ``பெருமானே! பூலோகத்தில் மக்கள் அறியாமையால் துன்புறுகின்றனர். அறியாமை இருளால் தங்கள் திருநாமத்தைக் கூட ஓத மறந்திட்டனர்.
அவர்களது அறியாமையைத் தாங்கள் போக்க வேண்டும்'' என வேண்டினார். நாரதரது கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், ``தான் பூலோகம் சென்று தர்மத்தைக் காக்கிறேன்'' என கூறினார். மேலும் ``நான் வரும் வரை நந்திதேவன் எனது இடத்தில் இருப்பான்''. நந்திதேவன் பக்தியில் என்னைப் போன்றவன்.
ஆதியில் அவதரித்தவன். நானே நந்திதேவன். தர்மமே வடிவானவன். ``சிவாய நம'' எனும் மந்திரத்தின் உருவகம் நந்திதேவனே எப்போதும் என்னைச் சுமந்து நிற்கும் நந்திதேவன் எனக்கு ஈடாகத் திகழ்பவன்.
எனவே நந்திதேவரை வழிபாடு செய்பவர்க்கு ``சிறந்த பக்தியும் நல்ல குழந்தைச் செல்வங்களும், சகல காரிய சித்தியும் உயர்ந்த பதவிகளும், நல்ல எண்ணங்கள், நல்லொழுக்கங்கள் கிடைக்கும்' இவற்றிற்கு மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அடைவர் என விளக்கினார்.
சிவபெருமான் தனக்கு நிகராக நந்திதேவரை விளக்கியுள்ளதால் ஒவ்வொரு பிரதோஷ வேளையிலும் நந்தி தேவரை வழிபட்டுப் போற்ற வேண்டும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» நந்திதேவருக்கே முதல் வழிபாடு
» நந்திதேவருக்கே முதல் வழிபாடு
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» நந்திதேவருக்கே முதல் வழிபாடு
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum