மூஞ்சூறு வாகனத்தில் பிள்ளையார்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
மூஞ்சூறு வாகனத்தில் பிள்ளையார்
தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூரையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி மூஞ்சூறுவை வாகனமாக கொண்ட பிள்ளையார்தான்.
நாமம் பல தத்துவம் ஒன்று........
வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.
1400 ஆண்டு பழமை......
சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பவுத்த மக்கள் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மூஞ்சூறு வாகனத்தில் பிள்ளையார்
» கருட வாகனத்தில் ஏழுமலையான்
» ஏழுமலையான் சிறிய சேஷ வாகனத்தில் பவனி
» நவராத்திரி பிரம்மோற்சவம் : பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா
» திருப்பதி பிரம்மோற்சவம் : ஹனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா
» கருட வாகனத்தில் ஏழுமலையான்
» ஏழுமலையான் சிறிய சேஷ வாகனத்தில் பவனி
» நவராத்திரி பிரம்மோற்சவம் : பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா
» திருப்பதி பிரம்மோற்சவம் : ஹனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum