தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விநாயகருக்கு 21 வகை இலை அர்ச்சனை

Go down

விநாயகருக்கு 21 வகை இலை அர்ச்சனை Empty விநாயகருக்கு 21 வகை இலை அர்ச்சனை

Post  birundha Sat Apr 13, 2013 10:57 pm


விநாயகர் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து கொள்வது நலம் பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-

1. முல்லை இலை: அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. விஸ்வம் இலை: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடை யலாம்.

6. ஊமத்தை இலை: பெருந்தன்மை கைவரப் பெறும்.

7. வன்னி இலை: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.

8. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.

10. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

11. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.

12. மருதம் இலை: மகப்பேறு கிடைக்கும்

13. விஷ்ணுகிராந்தி இலை: நுண்ணிவு கைவரப் பெறும்.

14. மாதுளை இலை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.

15. தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.

16. மருக்கொழுந்து இலை: இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.

17. அரசம் இலை: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

18. ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.

19. தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.

20. அகத்தி இலை: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum