தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னை மரியாவை வணங்குவது ஏன்?

Go down

அன்னை மரியாவை வணங்குவது ஏன்? Empty அன்னை மரியாவை வணங்குவது ஏன்?

Post  birundha Sat Apr 13, 2013 8:47 pm


கத்தோலிக்கம், ஆர்த்தடாக்ஸ் திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், இயேசுவின் தாய் மரியாவுக்கு வணக்கம் செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் அன்னை மரியாவுக்கு மரியாதை கொடுத்து வந்தாலும், கத்தோலிக்க திருச்சபையில் மரியன்னை மீதான பக்தி அதிகமாக காணப்படுகிறது.

இறைமகன் இயேசுவுக்கு அடுத்ததாக, அன்னை மரியாவிடம் தான் கிறிஸ்தவர்கள் உதவி வேண்டி செபிக்கிறார்கள். அன்னை மீதான கிறிஸ்தவர்களின் பக்திக்கான காரணத்தை நாம் அறிந்து கொள்வோம். எல்லாம் வல்லவரான ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்ற மூன்று ஆட்களாக செயல்படுகிறார் என்பது கிறிஸ்தவர்களின் மறை உண்மை.

அந்த மூவொரு கடவுளுக்கு மிகவும் பிரியமானவராக திகழ்வதால்தான், கிறிஸ்தவர்கள் அன்னை மரியாவை நாடி அவரது உதவியை வேண்டுகிறார்கள். இயேசு உலகில் பிறப்பதற்கு முன்பாக, கன்னி மரியாவின் சம்மதத்தை கடவுள் கேட்கிறார். தந்தை யாம் கடவுள் தனது வான தூதரை அனுப்பி மரியாவை வாழ்த்துவதை நற்செய்தியாளர் நமக்கு எடுத்துரைக்கிறார்.

வான தூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். (லூக்கா 1:28) ஒரு அரசர் தனது தூதரை அனுப்பும் போது, அந்த அரசரின் செய்தியையே தூதர் எடுத்துரைப்பார். அவ்வாறே, கடவுளின் வாழ்த்தையே கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவுக்கு கூறினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தந்தை கடவுளே, `அருள்மிகப் பெற்றவள்' என்று வாழ்த்திய அன்னையை நாமும் வாழ்த்துவது கிறிஸ்தவர்களின் கடமை ஆகிறது. இறைமகன் இயேசுவைக் கருவில் தாங்கியதால், மரியாவை இறையன்னை என கத்தோலிக்க திருச்சபை அழைக்கிறது.

உலகில் மனிதராகப் பிறந்த கடவுளைப் பெற்றெடுத்ததால், மரியா கடவுளின் தாய் என்று அழைக்கப்படுகிறார். இறைத்தந்தையின் திட்டப்படி, இறைமகன் இயேசு, இறைஆவியின் வல்லமையால் இவ்வுலகில் மனிதராகத் தோன்றினார். இயேசுவின் தாயாகத் திகழ்வதால் மரியாவைப் போற்றிப் புகழ்வதும், பெருமைப்படுத்தி வணக்கம் செலுத்துவதும் மிகவும் தகுதியானதே!

ஏனெனில் தூய ஆவியே மரியாவை `கடவுளின் அன்னை' என்று கூறியதாக பைபிளில் காணப்படுகிறது. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டவராய், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்ë. என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?'' என்றார். (லூக்கா 1:41-43) எலிசபெத்து தானாக அல்ல, தூய ஆவியின் தூண்டுதலால் மரியாவை `ஆண்டவரின் தாய்' என்று அழைத்ததால், நாமும் மரியாவை கடவுளின் தாய் என்று அழைக்கிறோம்.

கானாவூரில் நடந்த திருமணத்தில் இயேசு, அவரது தாயின் வேண்டுகோளை ஏற்று தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்தார். அதுபோல மரியன்னையின் உதவியால் இயேசுவின் அற்புதங்களைப் பெற கிறிஸ்தவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, பல்வேறு சமய மக்களும் இறையன்னை மரியாவின் உதவியைத் தேடி அவருடைய திருத்தலங்களுக்கு அணி வகுத்து செல்வதைக் காண்கிறோம்.

நமக்காக கடவுளிடம் பரிந்து பேசும் அன்னை மரியா, கேட்கும் வரங்களை இயேசுவிடம் இருந்து பெற்றுத் தருகிறார். உலகெங்கும் பல இடங்களில் காட்சி அளித்துள்ள அன்னை மரியா, கடவுளுக்கு உகந்த வகையில் வாழுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்ததை வரலாறு நமக்கு காட்டுகிறது. "கடவுளின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க மனந்திரும்புங்கள்'' என அன்னை வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இவ்வளவு இரக்கம் மிகுந்த தாயை வணங்குவதும், அவரது உதவியை வேண்டி மன்றாடுவதும் கடவுளுக்கு விருப்பமானதும், உகந்ததும் ஆகும். எனவேதான், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைத்து துன்பங்களிலும் அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தி, அவரது உதவியை வேண்டி பெறுகிறார்கள். கேட்ட வரம் கிடைப்பதற்காக பல்வேறு பக்தி முயற்சிகளையும், விழாக்களையும் சிறப்பித்து மகிழ்கிறார்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum