தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இறைவனுக்கு எப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்?

Go down

இறைவனுக்கு எப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்? Empty இறைவனுக்கு எப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்?

Post  birundha Sun Apr 07, 2013 9:04 pm


அருளை நல்கி, மருளைப் போக்கும் கருணைக் கடல் இறைவன். அகந்தையை விட்டொழித்து, `நீயன்றி வேறு கதி இல்லை' என்ற மனோபாவத்தோடு, நம் உடலை தரையில் கிடத்தி இறைவனை வணங்குவதே நமஸ்காரத்தின் உட்பொருள். நமஸ்கார வகைகள் வருமாறு...

ஏகாங்க நமஸ்காரம்:- தலையை மட்டும் குனிந்து வணங்குவது,

த்ரியங்க நமஸ்காரம்:- தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வணங்குதல்,

பஞ்சாங்க நமஸ்காரம்:- (பெண்களுக்கு மட்டும்) கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு, தலை ஆக 5 அங்கங்கள் தரையில் படும்படி நமஸ்கரித்தல்,

அஷ்டாங்க நமஸ்காரம்:- (ஆண்களுக்கு) தலை, கை இரண்டு, இரு காதுகள், மார்பு, இரு கால்கள் ஆகிய 8 அங்கங்கள் தரையில் படவேண்டும்.

இறைவனுக்கு 3 முறை, சன்னியாசிகளுக்கு 4 முறை, தாய்-தகப்பனுக்கு ஒருமுறை நமஸ்காரம் செய்ய வேண்டும். மனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யும் போது, அவர்கள் அவசியம் ஆசியளிக்க வேண்டும். கோவிலில், இறைவனைத்தவிர வேறு யாருக்குமே நமஸ்காரம் செய்யவே கூடாது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum