ஆஞ்சநேயர் காண்டம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
ஆஞ்சநேயர் காண்டம்
ராமாயணத்தில் மிக சிறந்தது சுந்தரகாண்டம். வால்மீகி ஏன் சுந்தர காண்டம் என இதற்கு பெயரிட்டார் தெரியுமா? சுந்தரம் என்றால் அழகு என்று அர்த்தம். சுந்தரகாண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயர். எனவே வால்மீகி முதலில் "ஆஞ்சநேய காண்டபம்'' என்று தான் காண்டத்துக்கு தலைப்பு கொடுத்தார்.
உடனே, ஆஞ்சநேயர் வால்மீகியிடம் வந்து, நான் ராமதாசன். ஆகையால் என் பெயர் வைக்க வேண்டாம்'' என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். பொருள் புதிந்த புன்னகையுடன் சம்மதித்து ஆஞ்சநேயர் விருப்பப்படி மாற்றி "சுந்தர காண்டம்'' என பெயரிட்டார். ஆஞ்சநேயர் மகிழ்ச்சியடைந்தார்.
பின்பு ஒருநாள் ஆஞ்சநேயர், தன் அன்னை அஞ்சனையை, காண சென்றபோது "சுந்தரா வா'' என்று அஞ்சனை வரவேற்றான். ஆஞ்சநேயர் வியப்புடன் அன்னையை நோக்கி, "ஏன் அம்மா, என்னை சுந்தரா என அழைத்தீர்கள்'' என்று கேட்டார். அதற்கு அஞ்சனையோ, நாங்கள் உனக்கு இட்ட பெயர் சுந்தரம், அதனால் அவ்வாறு அழைத்தேன்'' என்று சொன்னாள்.
வால்மீகியின் தீர்க்க தரிசனத்தை ஆஞ்சநேயர் அப்போதுதான் உணர்ந்தார். ஓடோடி வந்து வால்மீகியை சந்தித்து மறுபடியும் பெயர் மாற்றும்படி கேட்டார். வால்மீகியோ, சுந்தர காண்டத்தை நிறைவு செய்து விட்டேன். இனி, மாற்றுவதற்கு இடமில்லை என முடிவாக சொல்லி விட்டார். ஆஞ்சநேயர் பெருமையை அனைவரும் அறியும் பொருட்டு வால்மீகி இவ்வாறு செய்தார்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஆஞ்சநேயர் காண்டம்
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» ஆஞ்சநேயர் ஆலயம்
» ஆஞ்சநேயர் ஆலயம்
» ஆஞ்சநேயர் ஆலயம்
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» ஆஞ்சநேயர் ஆலயம்
» ஆஞ்சநேயர் ஆலயம்
» ஆஞ்சநேயர் ஆலயம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum