கைலாயத்தில் தோன்றிய பிரதோஷம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
கைலாயத்தில் தோன்றிய பிரதோஷம்
பிரதோஷ பூஜை தோன்றியது திருக்கயிலையில்தான். முற்காலத்தில் அசுரர்களால் தங்கள் குலம் அழிந்து விடுமோ என்ற அச்சம், பயம், குழப்பம் தேவர்களின் உள்ளத்தை வாட்டியது. பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால் முதுமை, மரணம் இன்றி என்றும் இளமையோடு வாழலாம் என்று தேவர்களிடம் திருமால் கூறினார்.
மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையை பிரும்மாவும் தேவர்களும் ஏற்பாடு செய்தனர். அசுரர்களும் இதில் கலந்து கொள்ள வந்தனர். திருமால் தந்திரமாக தேவர்கள் வால் பக்கமும், அசுரர்கள் தலைப்பக்கமும் நின்று பாற்கடலைக் கடைய ஏற்பாடு செய்தார்.
திருமாலும் கூர்ம வடிவம் எடுத்து கடலுக்கடியில் சென்று மந்தார மலையைத் தாங்கினார். தேவரும் அசுரரும் திருப்பாற்கடலை கடையத் தொடங்கியது தசமிதிதி காலையிலாகும். இரவு கழிந்து, அடுத்த நாள் ஏகாதசி காலையில் வலி பொறுக்க முடியாமல் வாசுகி விஷத்தைக் கக்கியது. கடலில் இருந்தும் முதலில் விஷம் தோன்றியது.
ஆலம் என்றால் விஷம். வாசுகியின் ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் சேர்ந்து ஆலாலமாகி புகை மண்டலம் போல் வடிவெடுத்தது. அதன் ஆனல் கொடுமை தாங்க முடியாமல் தேவர்களும் மற்றவர்களும் சிதறி ஓடினர். ஆமை வடிவம் எடுத்து மேலே வந்த திருமாலின் பளிங்கு நிறமும் விஷப்புகையால் கருநிறமாக மாறியது.
சிவபெருமானிடம் புகலிடம் அடைய திருமால், பிரம்மா, தேவர்கள் ஆகியோர் கயிலையை நோக்கி ஓடி வலமாகச் செல்ல முயன்றனர். அவர்கள் வலம் செய்ய முடியாமல் விஷ மண்டலம் பரவித்தடுத்தது. அதனால் அவர்கள் இடமாக ஒடினர். சிறிது தூரம் சென்றதும், அங்கும் அந்த விஷமண்டலம் வந்து தாக்கவே மீண்டும் திரும்பி ஓடி வந்தனர். இப்படி தேவர்கள் அன்று கயிலையை அப்பிரதட்சணமாக வலம் வந்த காரணத்தால்தான் சிவாலய பிரதோஷ நாளன்று அப்ரதட்சணம் வரும் முறை பின்பற்றப்படுகின்றது. இதுவே, சோமசூத்ர பிரதட்சணம் ஆகியது.
மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையை பிரும்மாவும் தேவர்களும் ஏற்பாடு செய்தனர். அசுரர்களும் இதில் கலந்து கொள்ள வந்தனர். திருமால் தந்திரமாக தேவர்கள் வால் பக்கமும், அசுரர்கள் தலைப்பக்கமும் நின்று பாற்கடலைக் கடைய ஏற்பாடு செய்தார்.
திருமாலும் கூர்ம வடிவம் எடுத்து கடலுக்கடியில் சென்று மந்தார மலையைத் தாங்கினார். தேவரும் அசுரரும் திருப்பாற்கடலை கடையத் தொடங்கியது தசமிதிதி காலையிலாகும். இரவு கழிந்து, அடுத்த நாள் ஏகாதசி காலையில் வலி பொறுக்க முடியாமல் வாசுகி விஷத்தைக் கக்கியது. கடலில் இருந்தும் முதலில் விஷம் தோன்றியது.
ஆலம் என்றால் விஷம். வாசுகியின் ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் சேர்ந்து ஆலாலமாகி புகை மண்டலம் போல் வடிவெடுத்தது. அதன் ஆனல் கொடுமை தாங்க முடியாமல் தேவர்களும் மற்றவர்களும் சிதறி ஓடினர். ஆமை வடிவம் எடுத்து மேலே வந்த திருமாலின் பளிங்கு நிறமும் விஷப்புகையால் கருநிறமாக மாறியது.
சிவபெருமானிடம் புகலிடம் அடைய திருமால், பிரம்மா, தேவர்கள் ஆகியோர் கயிலையை நோக்கி ஓடி வலமாகச் செல்ல முயன்றனர். அவர்கள் வலம் செய்ய முடியாமல் விஷ மண்டலம் பரவித்தடுத்தது. அதனால் அவர்கள் இடமாக ஒடினர். சிறிது தூரம் சென்றதும், அங்கும் அந்த விஷமண்டலம் வந்து தாக்கவே மீண்டும் திரும்பி ஓடி வந்தனர். இப்படி தேவர்கள் அன்று கயிலையை அப்பிரதட்சணமாக வலம் வந்த காரணத்தால்தான் சிவாலய பிரதோஷ நாளன்று அப்ரதட்சணம் வரும் முறை பின்பற்றப்படுகின்றது. இதுவே, சோமசூத்ர பிரதட்சணம் ஆகியது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சங்கடஹர சதுர்த்தி தோன்றிய வரலாறு
» தமிழ்நாட்டில் தோன்றிய சான்றோர்கள்
» தமிழ்நாட்டில் தோன்றிய சான்றோர்கள்
» சோமவாரத்தில் தோன்றிய மதுரை.......
» சோமவாரத்தில் தோன்றிய மதுரை.......
» தமிழ்நாட்டில் தோன்றிய சான்றோர்கள்
» தமிழ்நாட்டில் தோன்றிய சான்றோர்கள்
» சோமவாரத்தில் தோன்றிய மதுரை.......
» சோமவாரத்தில் தோன்றிய மதுரை.......
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum