நந்திதேவருக்கே முதல் வழிபாடு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
நந்திதேவருக்கே முதல் வழிபாடு
சிவாலயங்களில் சிவபெருமானை வணங்கும் முன் நந்தி தேவரையே முதலில் வணங்க வேண்டும். இதன் காரணத்தை பசவ புராணம் கூறுகிறது. சிவபெருமான் ஒரு தடவை நாரதரிடம் நான் விரைவில் பூலோகம் செல்வேன். தர்மத்தைக் காத்து மீண்டும் சைவம் தழைக்கச் செய்வேன். நான் வரும் வரையில் கயிலாயத்தில் நந்திதேவன் எனது இடத்தில் இருப்பான் என்றார்.
அனைவரின் முகத்திலும் ஆச்சரியம் விரிந்தது. அதைப் புரிந்து கொண்ட சிவபெருமான், நந்திதேவன் பக்தியில் என்னைப் போன்றவன். ஆதியில் அவதரித்தவன். நானே நந்திதேவன். நந்தி தர்மமே வடிவானவன். சிவாய நம என்ற பஞ்சாட்ச மந்திரத்தின் உருவகம் நந்தி தேவனே. எப்போதும் என்னைச் சுமந்து நிற்கும் நந்திதேவன் எனக்கு ஈடாகத் திகழ்பவன். நந்திதேவனை வழிபடுபவர்களுக்குச் சிறந்த பக்தியும், நற்குணங்களுடைய குழந்தைச், செல்வங்களும், சகல காரிய சித்தியும் உயர்ந்த பதவிகளும், நல்ல எண்ணங்களும், நல்லொழுக்கமும் கிடைக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர். என்று நந்திதேவரின் பெருமைகளை எடுத்துக் கூறினார் சிவபெருமான். சிவபெருமான் தனக்கு இணையாக நந்திதேவரைக் கூறி உள்ளதால் சிவபெருமானை வழி படுவதற்கு முன் நந்தி தேவரை வணங்க வேண்டும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» நந்திதேவருக்கே முதல் வழிபாடு
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» நந்திதேவருக்கு முதல் வழிபாடு ஏன்?
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» நந்திதேவருக்கு முதல் வழிபாடு ஏன்?
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum