தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்பிருந்தால் அச்சமில்லை

Go down

அன்பிருந்தால் அச்சமில்லை Empty அன்பிருந்தால் அச்சமில்லை

Post  birundha Sat Jan 19, 2013 9:20 pm

* அன்பு யாவருக்கும் நன்மை செய்யும். பொறாமை கொள்ளாது. தற்புகழ்ச்சி செய்யாது. இறுமாப்பு அடையாது.அன்புள்ளவருக்கு அச்சத்திற்கு இடமேயில்லை. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவாராக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது.
* இளைஞர்களே! இளமையின் நாட்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனக்கவலையை ஒழியுங்கள்.
உடலுக்கு ஊறுவராதபடி காத்துக் கொள்ளுங்கள்.
* ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக் கொள்வான். இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான். தந்தையையும், தாயையும் கொடுமைப்படுத்தும் மகன் வெட்கக்கேட்டையும்,
இழிவையும் வருவித்துக் கொள்வான்.
* கடவுளே உங்களுள் செயலாற்றுகிறார். அவரே, தமது திருவுள்ளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
* நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றாலே என்ன என்றே தெரியாத கபடமற்றவர்களாயும் இருக்கவேண்டும்.
* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்பநாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum