தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்ணை கடத்தி கொன்ற 2 பேருக்கு 3 ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு

Go down

பெண்ணை கடத்தி கொன்ற 2 பேருக்கு 3 ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு Empty பெண்ணை கடத்தி கொன்ற 2 பேருக்கு 3 ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு

Post  meenu Thu Mar 28, 2013 2:35 pm

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள காரையூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர் (வயது 35). திருமணம் ஆகாமல் இருந்த இவருக்கு பெற்றோர் பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் அமையவில்லை.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (33), சக்திவேல் (35) ஆகியோர் மலரை சந்தித்து ஆசை மாப்பிள்ளை காட்டினார்கள். சென்னையில் ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கிறார். அவரை சந்திக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறிய ஆறுமுகம் மற்றும் சக்திவேல் மலரை அழைத்தனர். அவர்களை நம்பிய மலரும் சென்னை செல்வதற்காக அறந்தாங்கி பஸ் நிலையம் சென்றார். அப்போது அங்கு வந்த ஆறுமுகம் மற்றும் சக்திவேல் மலருடன் நைசாக பேசி கடத்தி சென்று அறந்தாங்கி அருகில் உள்ள ஆதினகரை பகுதியில் வைத்து மலர் கழுத்தில் அணிந்த 4 பவுன் நகையை பறித்தனர்.

இந்த சம்பவத்தை மலர் வெளியில் சொல்லி விடுவார் என்பதால் அவரை இரண்டு பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் 2008-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி நடந்தது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து மலர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆறுமுகம் மற்றும் சக்திவேல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாம்பசிவம் தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகளான ஆறுமுகம் மற்றும் சக்திவேலுக்கு தலா 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  அசாம் கைதியின் தூக்கு ரத்து: ஆயுள் தண்டனையாக குறைப்பு-சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
» 42 வயதான பெண்ணை கடத்தி சென்று வல்லுறவு! மூவர் கைது!
» சபாஷ்! சரியான தீர்ப்பு! – கிரிக்கெட் சூதாடிகளுக்கு தக்க தண்டனை!
» நடிகை ரேவதி-சுரேஷ்மேனன் விவாகரத்து: கோர்ட்டு தீர்ப்பு
» பங்களாதேஷ் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum