தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏப்ரல் 25-ந்தேதி வன்னியர் பெருவிழா: அகிலேஷ்யாதவ் சென்னை வருகிறார்

Go down

ஏப்ரல் 25-ந்தேதி வன்னியர் பெருவிழா: அகிலேஷ்யாதவ் சென்னை வருகிறார் Empty ஏப்ரல் 25-ந்தேதி வன்னியர் பெருவிழா: அகிலேஷ்யாதவ் சென்னை வருகிறார்

Post  meenu Thu Mar 28, 2013 2:05 pm

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பா.ம.க. வின் வன்னியர் சங்கம் சார்பில் வருகிற ஏப்ரல் 25-ந்தேதி சித்ரா பவுர்ணமி அன்று வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடை பெற உள்ளது. இம்மாநாடு நடைபெற உள்ள மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. இளைஞர் சங்க செயலாளருமான அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று விழா ஏற்பாடுகள் குறித்து பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அன்புமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மாமல்லபுரத்தில் நடை பெற உள்ள சித்ரா பவுர்ணமி வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும். இம்மாநாட்டில் உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ்யாதவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இருந்து ஒரு கோடி வன்னியர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்கின்றனர். தமிழகத்தை வன்னியர் ஆள வேண்டும் என்ற முழக்கத்துடன் இம்மாநாடு நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், ரவிராஜ், பொன்.கங்காதரன், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வாசு, கணேசமூர்த்தி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் ஏகாம்பரம், காரணை ராதா, காயார் ஏழுமலை, தனுசு, அரிகிருஷ்ணன், நகர நிர்வாகிகள் பாலன், ராஜசேகர், சீனிவாசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum