தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போலி பாஸ்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் 6 பேர் கைது

Go down

போலி பாஸ்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் 6 பேர் கைது Empty போலி பாஸ்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் 6 பேர் கைது

Post  ishwarya Wed Mar 27, 2013 12:24 pm

சென்னை விமான நிலையத்தில் இருந்து ரியாத் வழியாக மஸ்கட்டுக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதில் கொல்கத்தா பாஸ்போர்ட்டில் 6 பேர் மஸ்கட் செல்ல முயன்றது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் வைத்திருந்தது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது. அவர்கள் 6 பேரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 6 பேரும் வங்காளதேசத்தைச் சேர்ந்த அப்துல்மன்னன் (28), அவினூர் (23), ஜாகீர் உசேன் (25), ஜிபின்சேக் (27), மிராஜ் சேக் (20), முகமது முனிர்வர்ஷ் சாகர் (27) ஆகியோர் என தெரிய வந்தது.

இவர்கள் மஸ்கட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்க்க சென்றனர். இதற்காக கொல்கத்தா மூலம் டெல்லி வந்தனர். அங்கு ஏஜெண்டு ஒருவரிடம் தலா ரூ. 2 லட்சம் கொடுத்து போலியாக பாஸ்போர்ட் தயார் செய்தனர். பின்னர் ரெயிலில் சென்னைக்கு வந்த அவர்கள் விமானம் மூலம் மஸ்கட் செல்ல முயன்றனர். ஆனால் அதிகாரிகள் சோதனையில் அவர்கள் சிக்கி கொண்டனர்.

கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
» சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
»  சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! – விமான நிலையத்தில் ரஜினி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum