தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனைத்து கட்சியினரும் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: வைகோ அறிக்கை

Go down

அனைத்து கட்சியினரும் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: வைகோ அறிக்கை Empty அனைத்து கட்சியினரும் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: வைகோ அறிக்கை

Post  ishwarya Wed Mar 27, 2013 12:20 pm

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை, நிலம், நிலத்தடி நீர், நிலத்தில் தேங்கும் நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நஞ்சு மயமாக்கி மனித உயிர்களுக்கும் கால்நடைகளின் உயிர்களுக்கும் ஆபத்து விளைவிக்கிறது என்பதை, உலகப் புகழ்பெற்ற சுற்றுச் சூழல் மேதையும் விஞ்ஞானியுமான அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், அசைக்க முடியாத ஆதாரங்களுடன் ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தூத்துக்குடி அருகே கடலில் இருக்கின்ற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள், ஸ்டெர்லைட் ஆலையால் அழியும் ஆபத்து ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போயின. கால்நடைகள் குறிப்பாக, ஆடுகள் ஸ்டெர் லைட் நச்சுத் தண்ணீரைப் பருகி இறந்து போயின.

ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மார்ச் 28-ந் தேதி (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் இருந்து புறப்பட்டு, ஸ்டெர்லைட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திட ஸ்டெர் லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

தூத்துக்குடி வியாபாரிகள் சங்கமும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆகிய அமைப்புகள் அன்றைய தினம் பகல் 12 மணி வரை தூத்துக்குடியில் கடைகளை அடைக்க ஏற்பாடுகள் செய்து உள்ளன. சங்கு குழி சங்கத்தினர் அன்று கடல் தொழிலுக்குச் செல்வது இல்லை என்று தெரிவித்து உள்ளனர். பல்வேறு தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஒருசேர இணைந்து இந்த அறப்போரை முன்னெடுத்துள்ளனர்.

அரசியல் எல்லைகளைக் கடந்து போராட்டம் நடைபெறுவதால், கட்சிக் கொடிகளை இப்போராட்டத்தில் தவிர்க்குமாறு வேண்டுகிறேன். மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் பங்கு ஏற்க ஆர்த்தெழுந்து வாருங்கள்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்:தூத்துக்குடியில் வைகோ பேட்டி
» வைகோ, நெடுமாறன் தலைமையில் இன்று கேரளா செல்லும் சாலைகளில் முற்றுகை
» இலங்கையுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும்:வைகோ
»  துபாயில் தங்கவைக்கப்பட்டுள்ள 19 ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமருக்கு, வைகோ கோரிக்கை
» மோதல்களை தவிர்க்க வேண்டும் ஜான்பாண்டியன் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum