தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தலை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியின் பணத்தை போலி செக் மூலம் அபகரிக்க முயற்சி

Go down

தலை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியின் பணத்தை போலி செக் மூலம் அபகரிக்க முயற்சி Empty தலை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியின் பணத்தை போலி செக் மூலம் அபகரிக்க முயற்சி

Post  ishwarya Wed Mar 27, 2013 12:17 pm

சண்டிகர், மார்ச் 26-

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த 2 இந்திய வீரர்களின் தலையை துண்டித்து பாகிஸ்தானியர்கள் படுகொலை செய்தனர். கடந்த ஜனவரி 8-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது.

வீர மரணமடைந்த இந்திய வீரர்கள் இருவரின் குடும்பத்திற்கும் மத்திய-மாநில அரசுகள் பெருமளவில் நிதியுதவி செய்தன. படுகொலை செய்யப்பட்ட வீரர்களில் ஒருவரான ஹேம்ராஜின் மனைவி தர்மாவதி, இந்த தொகையை சட்டாவில் உள்ள ஸ்டேட் பாங்கில் சேமித்து வைத்திருந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பல்வாலில் உள்ள ஸ்டேட் பாங்கு கிளையில் 2 காசோலைகளை டெபாசிட் செய்த ஒரு நபர், தர்மாவதியின் கணக்கில் இருந்து ரூ.60 லட்சத்தை எடுக்க முயன்றார்.

சந்தேகமடைந்த பல்வால் கிளை மேனேஜர், சட்டா கிளையில் விசாரித்தபோது, பணம் எடுக்க முயன்ற நபர், தர்மாவதிக்கு வழங்கப்பட்டதை போன்ற காசோலை புத்தகங்களை போலியாக தயாரித்து ரூ.60 லட்சத்தை மோசடி செய்ய முயன்றது தெரிய வந்தது.

வீர மரணம் அடைந்த போர் வீரரின் மனைவிக்கு சொந்தமான பணத்தை மோசடி செய்ய முயன்ற அந்த நபரை பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum